இந்தியா

ஹைதராபாதில் 26 வயது கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியை எரித்து கொலை!

Quick Share

தெலங்கான மாநிலம் ஹைதராபாதில் சேர்த்தவர் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி () கொல்லாபுரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் பணியாற்றிவந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல் தனது பணியை முடித்து வீட்டிற்கு திரும்பிய அவர், உடனடியாக ஒரு டாக்டரை பார்ப்பதற்காக கச்சிபவுலிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.

ப்ரியங்காவின் வாகனம் தொண்டுப்பள்ளி ஓஆர்ஆர் டோல்கேட் அருகில் பஞ்சர் ஆனது. அருகே இருந்த லாரி டிரைவர் மற்றும் கிளீனர் ப்ரியங்காவிற்கு நான் உதவி செய்கிறேன் என முன்வந்துள்ளனர். அப்போது 9.00 மணிக்கு தங்கைக்கு போன் செய்து “என்னுடைய பைக் டோல் கேட் அருகே பஞ்சர் ஆகிவிட்டது, தொண்டுப்பள்ளி ஓஆர்ஆர் டோல் கேட் அருகில் தான் இருக்கிறேன், எனக்கு பயமாக இருக்கிறது என்னோடு பேசிக்கொண்டிரு” என கூறியுள்ளார்”.

மறுநாள் காலை ஆகியும் பிரியங்கா வீடு திரும்பவில்லை எனவே குடும்பத்தார் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் பெங்களூர் ஹைதராபாத் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் அருகே உடல் எறிந்த நிலையில் பிணமாக பிரியங்கா கண்டெடுக்கப்பட்டார்.

டோல் கேட் அருகில் உள்ள கட்டிடத்தில் செருப்பும், ஒரு பர்ஸ், உள்ளாடைகள் மற்றும் மது பாட்டிலும் கண்டெடுக்கப்பட்டது. இதன் மூலம் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

“ரூ.139 கோடி வருவாய் தந்த பிளாட்பாரம் டிக்கெட்” அமைச்சர் பியுஷ் கோயல் தகவல்!!!

Quick Share

2018-2019ம் நிதியாண்டில் ரூ139 கோடி வருவாய் ஈட்டிய ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட், ரயில்வே அமைச்சர் கோயல் அறிவிப்பு.

நேற்று நடைபெற்ற லோக்சபா கூட்டத்தில் கேள்வி நேரத்தில் போது பதிலளித்த ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல், ரயில் பயணியருக்கும், அவர்களது உடமைகளுக்கும் ரயில்வே பாதுகாப்பு படையினரால் பாதுகாப்பு வழங்கப்படும். பெண் பயணிகளுக்கு, பெண் போலீசாரால் பாதுகாப்புவழங்கப்படும். இதற்க்காக 4,078 பெண் கான்ஸ்டபிள்கள், 298 எஸ்.ஐக்களை பணி நியமனம் செய்து, பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன மேலும் , 2,300 பெண் போலீசார் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர் .

ரயில் புறப்படுவது ,வருகை,சென்று கொண்டிருக்கும் இடம்  உள்ளிட்ட தகவலை உடனுக்குடன் அளிக்கும் புதிய கருவியும் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து ,ரயில்வே மையம் தயாரித்துள்ளது. மேலும் 6000 ரயில்களில் இந்த கருவியை  பொறுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ரயில் நிலையங்களில் கடைகள் அமைக்கவும் , விளம்பரங்கள் செய்யவும், 2018-2019ம் நிதியாண்டில் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தில் ரூ.230 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

மேலும் 2018-2019ல், பிளாட்பாரம் டிக்கெட் விற்பனை மூலம் ,ரூ.139 கோடி வருமானம் வந்துள்ளது. இதில் செப்டம்பர் வரை ரூ.78.50 கோடி வருமானம் கிடைத்துள்ளதாவும் அவர் தெரிவித்தார். 

ரூ.373 கோடி மோசடி !!! போலீசிடம் சிக்கிய பிரபல நடிகை…

Quick Share

மோசடி வழக்கில் 2 வருடம் தலைமறைவாக இருந்த பிரபல இந்தி  நடிகை மும்பையில் , போலீசிடம் சிக்கினார்.

2014 ஆம் ஆண்டு வெளிவந்த அனுராதா என்ற இந்தி படத்தில்  நடித்தவர் திஷா சவுத்ரி .இவர் சச்சின் நாயக் எனும் பிரபல ரவுடியின் முன்னாள் மனைவியாவார். சச்சின் நாயக் பெங்களூரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர் வீடு கட்டி தருவதாக கூறி பலரிடம் இருந்து ரூ.373 கோடி வசூலித்துள்ளார். ஆனால் சொன்னபடி யாருக்கும்  வீடு கட்டித்தரவில்லை.

இது தொடர்பாக எழுந்த புகாரில் கடந்த 2017 ம் ஆண்டு சச்சின் நாயக்கை போலீசார் கைது செய்தனர்.அவர் போலீசிடம் அளித்த வாக்கு மூலத்தில் ,மோசடி செய்த பணத்தில் இருந்து ரூ 25 கோடியை ஹிந்தி நடிகையான திஷாவிடம்  கொடுத்ததாக கூறினார் . மேலும் ரூ.10 கோடியை படம்  செலவிட்டதாகவும் , ரூ. 8 கோடியை தனது குழந்தைகளின் பெயர் சூட்டுவிழாவிற்கு செலவிட்டதாகவும் கூறினார்  இந்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் போலீசார் திஷாவை கைது செய்தனர்.

இரண்டு வாரம் கழித்து ஜாமீனில் வெளிவந்த திஷா தனது குழந்தைகளுடன் 2 வருடங்கள் தலைமறைவானார். இதனையடுத்து  பெங்களூருவில் ஒரு சிறிய வீட்டில் தங்கியிருப்பதாக வந்த தகவலில் அடிப்படையில் திஷாவை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர் . ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வந்த நடிகை மும்பையில் ஒரு சிறிய வீட்டில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை பார்த்த போலீசார் வியப்படைந்தனர் .

முன்னாள் பாஜக எம்.எல்.ஏ வின் மனைவி செய்வதை பாருங்கள்

Quick Share

ஜார்கண்ட் மாநிலத்தின் பட்காகோன் தொகுதியில் முன்னாள்  எம்எல்ஏ வாக இருந்தவர் லோக்நாத் மஹ்தோ ஆவர். இவர் பாஜகவில் இணைந்து 3 முறை எம்எல்ஏ வாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரின் மனைவி மவுலினிதேவி கூவி கூவி காய்விற்கும் நிகழ்வு பெரும் அளவில்  பேசப்பட்டு வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று செய்தியாளார்கள் மவுலினிதேவியை சந்தித்தனர். அப்பொழுது செய்தியாளர்கள் கேட்டகேள்விகளுக்கு தங்களை ஆச்சரியப்படுத்தும் முறையில் அவர் பதிலளித்தார். வேட்பு மனுதாக்கல் செய்ய ஏன் தன் வீட்டுக்காருடன் செல்லவில்லை என்ற கேள்விற்கு அவர் அங்கே சென்று  நான் என்ன செய்யபோகுறேன் என்று கூலாக பதிலளித்தார். மேலும் அவர் கணவருடன் சுற்றி கொண்டு இருந்தால் வீட்டு வேலை யார் செய்வது என கேட்டார்.

இந்த காய்கறிகள் என் தோட்டத்தில் விளைகிறது. இதை கூவி கூவி விற்பதற்கு தான் அசிங்கப்படவில்லை என சுவாரிசயமாக தெரிவித்தார். பிறகு காய்கறிகளை விற்று குடும்ப செலவை தானாகவே பார்த்துக்கொள்வதாக குறிப்பிட்டார். தன் வீட்டுக்காரின் சம்பள பணத்தில் சார்ந்திருப்பதில்லை என கூறினார். தன் வீட்டுக்காரர் எம்எல்எ ஆவதற்கு முன்பு இருந்தே காய்கறிகளை விற்கும் வேலையை செய்துவருவதாக தெரிவித்தார்.

“டிராபிக் போலீசாக மாறிய பொம்மைகள்” பெங்களூர் போலீசாரின் நூதன நடவடிக்கை !!!

Quick Share

பெங்களூர் மக்களை சாலை விதிகளை பிதற்ற வைப்பதற்க்காக ,அச்சு அசலாக போக்குவரத்து காவலரை போல தோற்றமளிக்கும் பொம்மைகள்.

மும்பை ,சென்னை போல கூட்டநெரிசல் உள்ளது பெங்களூர் , அங்கு சென்னையை போல ரயில் சேவைகள் இல்லை. தற்போதுதான் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல இடங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்க படாததால் டிராபிக் நிறைந்து காணப்படுகிறது. அதனால் போக்குவரத்து காவலர்கள் இல்லாத போது இங்கு மக்கள் சாலை விதிகளை பின்பற்றாமல், அவசர அவசரமாக முண்டியடித்துக்கொண்டு வேலைகளுக்கு செல்கின்றனர். தலைக்கவசம் அணிவதிலும் மக்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

இதனை தடுக்க பெங்களூர் போக்குவரத்து காவல் துறையினர் ஒரு நூதன திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர். ஜவுளிக்கடைகளில் உள்ளது போல் ஒரு ஆள் உயரமுள்ள சுமார் 30 பொம்மைகளுக்கு போலீஸ் போல உடை அணிவித்து, டிராபிக் அதிகம் உள்ள இடங்களில் போலீசார் நிறுத்தியுள்ளனர். சட்டென்று பார்த்தால் போக்குவரத்து காவலரை போல தோற்றமளிக்கும் இந்த டம்மி பொம்மைகள் நிஜ போலீஸ் போலவே உள்ளது. இதனால் மக்கள் பயந்து சாலை விதிகளை பின்பற்றுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

142 பயணிகளுடன் சென்னை வந்த ஏர் ஆசியா விமானத்தில் கோளாறு – பத்திரமாக தரை இறக்கப்பட...

Quick Share

டெல்லியில் இருந்து சென்னைக்கு 142 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் ஆசியா விமானம் தரையிறங்கும் போது கோளாறு ஏற்பட்டது. விமானத்தின் முன்சக்கரத்தை இயக்கியபோது பிரேக் பிடிப்பதில் கோளாறு ஏற்படலாம் என எச்சரிக்கை காட்டியது. இதையடுத்து விமானி தரையிறங்குவதற்கான மாற்று ஏற்பாடுகளை சாதுர்யமாக மேற்கொண்டார். உடனே இது பற்றிய தகவலை விமானி தரை கட்டுப்பாடு நிலையத்திற்கு தெரிவித்து உஷார் படுத்தினார்

தகவலறிந்த தரை கட்டுப்பாடு நிலையத்தினர் உடனே தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் நிறுத்தினர். விமானம் எந்த வித சேதாரம் ஏற்படாமல் பத்திரமாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்து இறங்கிய பிறகே அதில் பயணித்த பயணிகளுக்கு விமானத்தில் ஏற்பட்ட கோளாறு பற்றி தகவல் தெரியவந்தது. பாதுகாப்பாக வெளியே வந்த பயணிகள் நிம்மதியும் மகிழ்ச்சி அடைத்தனர்.

“ப .சிதம்பரம் என்ன பில்லா வா? இல்ல ரங்கா வா ? நீதிமன்றத்தில் கபில் சிபல் !!!

Quick Share

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரதின் நீதிமன்ற காவல் டிசம்பர் 11 வரை நீடித்து நேற்று டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.க்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆகஸ்ட் மாதம் 21 ம் தேதி கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். சிபிஐ வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இருப்பினும் அவரை அமலாக்கத்துறை கைது செய்து இருந்ததால் அவரால் வெளியே வர முடியவில்லை. அமலாக்கத்துறை தொடர்ந்த இந்த வழக்கில் நீதிமன்ற காவல் நேற்றோடு நிறைவடைந்த நிலையில் ப.சிதம்பரம் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது ப.சிதம்பரத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில் தனது வாதத்தில் “ஐ.என்.க்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு இன்றோடு 99 நாட்கள் ஆகின்றன. இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டால் 90 நாட்களுக்குள் ஜாமீன் வழங்க வேண்டும் ஆனால் இந்த விவகாரத்தில் மட்டும் அப்படி நடக்க வில்லை. அவர் என்ன பில்லா, ரங்கா போல் கொடிய குற்றவாளியா ?” என்றார். வாதத்தை கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் நீதிமன்ற காவலை டிசம்பர் 11 வரை நீடித்து தீர்ப்பளித்தனர். மேலும் சிபிஐ தொடர்ந்த வழக்கில் வரும் 29 ஆம் தேதிமுதல் விசாரணை மேற்கொள்ளப்படும் என உத்தரவிட்டனர். இதனால் ப.சிதம்பரம் உடனடியாக திகார் சிறையில் அடைக்கப்பட்டர்.

“முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டுளேன், பிரதமர் மோடியையும் சந்திக்க போகிறேன்”...

Quick Share

தமிழக முதல்வரை சந்திக்க அனுமதி வேண்டயுள்ளதாகவும், நாளை அல்லது நாளை மறுநாள் பிரதமரையும் சந்திக்கவுள்ளதாகவும் பாத்திமா லத்தீப்பின் தந்தை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளர்.

கேரள இளம்பெண் பாத்திமா லத்தீப் சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த 8 ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கினை மத்திய குற்ற பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றோரு பக்கம் சம்மந்தப்பட்ட ஐஐடி பேராசிரியர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் சென்னை ஐஐடி மாணவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடந்து பாத்திமாவின் தந்தை தனது மகளின் லேப்டாப், செல்போன் போன்றவை பாஸ்வேர்டுகள் போடப்பட்டு தன்னிடம் உள்ளதகவும், இதனை ஓபன் செய்து தங்கள் கண்முன் ஆய்வு செய்ய வேண்டுமெனவும் டிஜிபி , தடவியல் துறைக்கு அவர் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.இதனை ஒப்புக்கொண்ட எழும்பூர் நீதிமன்றம், பாத்திமாவின் தந்தை மட்டும் சகோதரிக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது . இதன்படி அவர்கள் கண்முன்னே பாத்திமாவின் லேப்டாப்,செல்போன் ஆய்வு செய்யப்பட்டது.

இதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பாத்திமா தந்தை விசாரணை அதிகாரிகள் மீது தங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளதாகவும், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். மேலும் அவர் இது தொடர்பாக தமிழக முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டிருப்பதாகவும், நாளை அல்லது நாளை மறுநாள் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV – C47 ! இஸ்ரோ

Quick Share

ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா அருகில் உள்ள சதீஷ்சவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து திட்டமிட்டபடி இன்று காலை 9.28 மணியளவில் PSLV – C47 விண்ணில் பாய்ந்தது. இதில் இந்திய கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் அமெரிக்கவின் 13 நானோ செயற்கைகோள் பொருத்தப்பட்டுயிருப்பது குறிப்பிடத்தக்கது.

PSLV – C47 விண்ணில் 500 கிலோ மீட்டர் உயர சுற்றுவட்ட பாதையில் செல்லும். இவை எளிதில் எதிரி இராணுவத்தின் அசைவுகளையும் தீவரவாதி பதுங்கி இருக்கும் குழிகளையும் மிக துல்லியமாக படம்பிடிக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் இஸ்ரோ மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளது.

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கார்த்திக் சிதம்பரம் கடிதம்!

Quick Share

சிவகங்கை தொகுதியில் மத்திய அரசிடம் அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி கேட்டு 11 நோயாளிகள் விண்ணப்பித்தனர். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் சிவங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம் அறுவை சிகிச்சைக்காக விண்ணப்பித்த 11 நோயாளிகளுக்கு பரிந்துரை செய்தார்.

கார்த்திக் சிதம்பரத்தின் பரிந்துரையை ஏற்று, 11 நோயாளிகளின் நலன் காக்க இந்திய பிரதமர் நிவாரண நிதியில் 29 லட்சம் ரூபாயை பிரதமர் மோடி வழங்கினார். அறுவை சிகிச்சை முடிந்து நலமடைந்த 11 நோயாளிகள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் கார்த்திக் சிதம்பரத்தின் பரிந்துரையை ஏற்று நிதி ஒதுக்கியதற்கு தனது நன்றியை கடிதம் மூலமாக மோடிக்கு தெரிவித்துள்ளார்.

நாளை காலை 9.28 மணியளவில் விண்ணில் ஏவப்படும் PSLV- C47 கவுண்டன் தொடங்கியது – இஸ்ரோ

Quick Share

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, விண்வெளி ஆராய்ச்சியில் தொடர்ந்து சாதனைகளை புரிந்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் அயராத உழைப்பினாலும் சிறிதும் துவண்டுவிடாமல் அடுத்தடுத்து ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறது. ஏற்கெனவே அறிவித்திருந்தபடி PSLV-C47 நாளை விண்ணில் ஏவ இன்று தயார்நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.

ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா அருகில் உள்ள சதீஷ்சவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து நாளை காலை 9.28 மணியளவில் விண்ணில் ஏவ PSLV – C47 கவுண்டன் இன்று தொடங்கியது. இதில் இந்திய கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் அமெரிக்கவின் 13 நானோ செயற்கைகோள் பொருத்தப்பட்டுயிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்எல்வி – சி47 நாளை விண்ணில் பாய்ந்து 500 கிலோ மீட்டர் உயர சுற்றுவட்ட பாதையில் 97.5 டிகிரி சாய்ந்த நிலையில் நிறுத்தப்பட்டும். இவை எளிதில் எதிரியின் இராணுவத்தின் அசைவுகளையும் தீவரவாதி பதுங்கி இருக்கும் குழிகளையும் மிக துல்லியமாக படம்பிடிக்கும் என திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய வந்த இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

நித்யானந்தாவை குஜராத் போலீஸ் நிச்சயமாக கைது செய்யும் – அகமதாபாத் காவல்துறை கண்காண...

Quick Share

இந்தியாவில் பிரபல சாமியார்களில் நித்யானந்தாவும் ஒருவர். இவர் தன்னைத்தானே சுவாமி என்று அழைத்துக்கொண்டு பல கோடி மக்களை தன் பக்தராக மாற்றியது பற்றிய குற்றச்சாட்டுகள் உள்ளது. ஆனால் இவர் இறைவன் அடியில் இருந்துக்கொண்டு பல குற்றங்களை செய்து வருகிறார் என பலர் அவரை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளார். இந்நிலையில் நித்யானந்தா மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டதும் பலாத்கார வழக்கு கர்நாடகாவில் பதிவு செயப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அகமதாபாத் காவல்துறை கண்காணிப்பாளர் திரு ஆர்.வி. அசாரி, சுவாமி நித்யானந்தா செய்த குற்றங்களுக்கு வலுவான ஆதாரங்களை திரட்டிக்கொண்டு வருகிறார். மேலும் அவர் நித்யானந்தா, குழந்தைகளை சட்ட விரோதமாக கடத்தி அடைத்து வைத்து நன்கொடை பெற்றுத் தருமாறு வலியுறுத்தியுள்ளார் என மறைந்திருந்த உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தார்.

இந்நிலையில் அவரின் ஆசிரமத்தை ஆய்வு செய்த போலீசார் நிர்வாகத்தை நடத்தி வந்த பிராணப்ரியா, பிரியதத்வா ஆகியோரை 5 நாட்களுக்கு முன்னரே கைது செய்யப்பட்டு தீவர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன என்று ஆர்.வி அசாரி தெரிவித்தார். நித்யானந்தாவை இந்தியாவில் தேடுவது வீண் என்றும் அவர் நேபாளம் வழியாக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார் என்றும் கூறினார்.

இந்நிலையில் ஜனார்தன சர்மா, தன் மகளை காணவில்லை என்ற வழக்கில் முதற்கட்ட விசாரணையில் அவர் பெயர் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு வேளை நித்யானந்தா இந்தியாவிற்கு வந்தால் நிச்சயமாக கைது செய்வோம் என்று பதில் அளித்தார்.




You cannot copy content of this Website