ஹைதராபாதில் 26 வயது கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியை எரித்து கொலை!
தெலங்கான மாநிலம் ஹைதராபாதில் சேர்த்தவர் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி () கொல்லாபுரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் பணியாற்றிவந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல் தனது பணியை முடித்து வீட்டிற்கு திரும்பிய அவர், உடனடியாக ஒரு டாக்டரை பார்ப்பதற்காக கச்சிபவுலிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
ப்ரியங்காவின் வாகனம் தொண்டுப்பள்ளி ஓஆர்ஆர் டோல்கேட் அருகில் பஞ்சர் ஆனது. அருகே இருந்த லாரி டிரைவர் மற்றும் கிளீனர் ப்ரியங்காவிற்கு நான் உதவி செய்கிறேன் என முன்வந்துள்ளனர். அப்போது 9.00 மணிக்கு தங்கைக்கு போன் செய்து “என்னுடைய பைக் டோல் கேட் அருகே பஞ்சர் ஆகிவிட்டது, தொண்டுப்பள்ளி ஓஆர்ஆர் டோல் கேட் அருகில் தான் இருக்கிறேன், எனக்கு பயமாக இருக்கிறது என்னோடு பேசிக்கொண்டிரு” என கூறியுள்ளார்”.
மறுநாள் காலை ஆகியும் பிரியங்கா வீடு திரும்பவில்லை எனவே குடும்பத்தார் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் பெங்களூர் ஹைதராபாத் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் அருகே உடல் எறிந்த நிலையில் பிணமாக பிரியங்கா கண்டெடுக்கப்பட்டார்.
டோல் கேட் அருகில் உள்ள கட்டிடத்தில் செருப்பும், ஒரு பர்ஸ், உள்ளாடைகள் மற்றும் மது பாட்டிலும் கண்டெடுக்கப்பட்டது. இதன் மூலம் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
