இந்தியா

சபரிமலைக்கு செல்ல மும்பையில் இருந்து கொச்சி வந்தார் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் !!

Quick Share

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்க்காக கொச்சி விமான நிலையத்தை வந்தடைந்தார் பெண்ணிய செயற்பட்டாளரான திருப்தி தேசாய்.

கொச்சி: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதிப்பது என்பது தொடர்பான வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால் முன்னால் பிறப்பிக்க பட்ட அணைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற நிலையே தொடருகிறது. ஆனால் சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க மாட்டோம் எனவும், நீதிமன்ற அனுமதி பெற்று வரும் பெண்களுக்கு மட்டும் தான் பாதுகாப்பு தருவோம் எனவும் கேரளா அரசு தெரிவித்திருக்கிறது.

இதனைத்தொடர்ந்து பல பெண்கள் சபரிமலைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர் ஆனால் அவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு தர மறுத்து திருப்பி அனுப்பினர்.நேற்று முன்தினம் சமூக ஆர்வலரான பாத்திமா ரெஹானா சபரிமலை செல்ல பாதுகாப்பு கேட்டிருந்த நிலையில் போலீசார் மறுத்துவிட்டனர். இந்தநிலையில் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்வதற்காக பெண்ணிய செயற்பாட்டாளரான திருப்தி தேசாய், பிந்து மற்றும் 7 பேர் கொண்ட குழு மும்பையில் இருந்து கொச்சி விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேசாய், இன்று அரசியலமைப்பு தினம் என்பதால் எங்களை தடுத்து நிறுத்தினால் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடருவோம். நங்கள் சபரிமலைக்கு வருவது குறித்த தகவலை ஏற்கனவே முதலமைச்சர் மற்றும் டிஜிபிக்கு தெரிவித்து விட்டேன் . எனவே, எனக்கு பாதுகாப்பு அழிப்பது அரசின் கடமையாகும் என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சபரிமலைக்கு வந்த திருப்தி தேசாய் போலீசாரால் திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டெல்லி மக்களை குண்டு வைத்து கொள்வது தான் சிறந்த வழி என உச்ச நீதிமன்றம் கூறியது!!

Quick Share

டெல்லி : டெல்லியில் நிலவி வரும் காற்று மாசுபாட்டால் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.இப்பாதிப்பு இந்த வருடம் மட்டும்  நடப்பதில்லை மாறாக  கடந்த பல வருட காலங்களாக நிலவி கொண்டு வருகிறது.ஒவ்வொரு வருடமும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் டெல்லி அரசும் மத்திய அரசும் எடுத்து வருகின்றன.

இந்த ஆண்டின் காற்று மாசுபாடு கடந்த ஆண்டுகளை விட பெருமளவில் காணப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது முறையாக டெல்லி காற்று மாசுபாட்டு  வழக்கை  நீதிபதி அருண் மிஸ்ரா , தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தனர்.விசாரணையில் எவ்வித பயன்தரும் திட்டங்களை கொண்டு வராமல் மக்களை கேஸ் பெட்டகத்தில் வாழும்படி வலியுறுத்துவது தவறானது என சுட்டிக்  காட்டி  இதற்கு பதிலாக டெல்லி மக்களை குண்டு வைத்து முழுமையாக கொல்வேதே சிறந்தது என நீதிபதி அமர்வு வருந்திக் கூறினர்.    

உச்ச நீதிமன்றம் உத்தரவு இட்ட பிறகும் ,பஞ்சாப் ஹரியான  போன்ற மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பது தொடர்ந்து காணப்படுகிறது.  டெல்லி காற்று மாசுபாட்டிற்கும் என்சிஆர் பகுதிகளில் வாழும் மக்களின் மூச்சு திணறலுக்கும்  அது முக்கிய  காரணமாக  அமைகிறது.  இதனால் அவர்களின் ஆயுட்காலம் குறைந்து வருவதாக குற்றம்  சாட்டியது உச்ச நீதிமன்றம்.

இதனை கண்டித்த உச்ச நீதிமன்றம் மத்திய மாநில அரசின்  வேறுபாட்டை களைத்து காற்று மாசுபாட்டை கட்டுபடுத்தும் கோபுரங்களை அமைக்க 10 புதிய திட்டங்களோடு வர வலியறுத்தியது  குறிப்பிடதக்கது.

“வேற்றுமையில் ஒற்றுமை காண,அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும்” மாந...

Quick Share

அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என மாநிலங்களவையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.

“வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்கு இந்திய அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும்” என மாநிலங்களவை கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ எம்.பி சட்ட முன்வரைவை அறிமுகம் செய்து பேசும் பொது கூறினார்.

இதன்பின், ஜி.எஸ்.டி வருமானத்தை பெருக்க மறுசீராய்வு குழுவை அரசு அமைத்து இருக்கிறதா? என்றும், இந்த வரிகளை வணிகர்கள் தன்னார்வத்துடன் வந்து கட்டுவதற்க்கான ஊக்குவிப்புகளை அரசு செய்கிறதா? எனவும் கேள்விகளை எழுப்பினார். இதற்கு நிதித்துறை இணைமந்திரியான அனுராக் தாக்குர் பதிலளித்தார். அந்த பதிலில் ஜி.எஸ்.டி வருமானத்தை பெருக்க மத்திய – மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க பட்டுள்ளதாகவும், ஒரு ஆண்டில் 1.1/2 கோடிக்கும் குறைவான பரிமாற்றங்கள் கொண்ட சிறு, குறு வணிகர்கள் கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு 1% மட்டும் வரி செலுத்தக்கூடிய தொகுப்பு தீர்வை திட்டம் உள்ளதாகவும், வரி செலுத்துவோருக்கு உதவியாக, ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு சிக்கல் இல்லாத வகையில் பணத்தை மாற்றுவதற்கு வழிமுறைகளையும் வெகுவிரைவில் அறிமுக படுத்துவதாகவும் இணைமந்திரி அனுராக் கூறினார்.

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தனியார் மயமாக்குவதை எதிர்த்து போராட்டம்!

Quick Share

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாருக்கு விற்க மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். பாரத் பெட்ரோலியம் தனியாருக்கு போவதை எதிர்த்து அந்நிருவனத்தின் ஊழியர்கள் வருகின்ற நவம்பர் 28 ஆம் தேதி அன்று வேலை நிறுத்ததில் ஈடுப்டுள்ளன.

இந்தியாவில் கொச்சி மற்றும் மும்பையில் போன்ற இடங்களில் பாரத் பெட்ரோலியம் தலைமை அலுவலகம் உள்ளது. பாரத் பெட்ரோலியத்தை முன்னாள் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அரசு நிறுவனமாக மாற்றினார். இந்நிருவனத்தில் சுமார் 12,500-க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகின்ற மார்ச் மாதத்திற்குள் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை தனியாருக்கு விற்க போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மத்திய அரசின் செயலை கண்டித்து நிறுவனத்தின் தொழிலாளர்கள் வருகின்ற 28 ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய போவதாக தெரிவித்தனர். வேலை நிருத்தம் ஒருநாள் மட்டுமே நடைபெறும் என தகவல் வெளியானது. இருப்பினும் அரசு தொழிற்லாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டால் தொடர்ந்து போராட்டுவோம் என தெரிவித்தார் கொச்சி பாரத் பெட்ரோலியதின் ஜெனெரல் செக்கரட்ரி பிரவீன் குமார் பி.

வேலை நிறுத்த நாளன்று தாம் அனைவரும் கருப்பு பேட்ட்ஜ் அணிந்தும் அந்நிறுவனம் வழங்கும் மதிய மற்றும் இரவு உணவை மறுத்தும் ஒருநாள் வேலை நிருத்ததில் ஈடுபடப்போவதாக திரு.பிரவீன் குமார் பி தெரிவித்தார். மேலும் வேலை நிறுத்த காரணத்தினால் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் உற்பத்தியில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என பாரத் பெட்ரோலிய அசோசியேஷன் தலைவர் அணில் மீதே கூறினார்.

தற்போது உயர் நீதி மன்றம் இந்த போராட்டத்திற்கு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே உயர் நீதி மன்றம் பாரத் பெட்ரோலியம் அலுவகங்களுக்கு வருகின்ற 28, 29 ஆகிய இறுதினங்களுக்கு பாதுகாப்பை வழங்க டி.ஜி.பிக்கு உத்தரவு பிறப்பித்தது.

“முப்பது கோடி முகமுடையாள், உயிர்மொய்ம்புற ஒன்றுடையாள்” பாரதி கவிதையில் இந்த...

Quick Share

இந்தியாவின் மொழிகளின் சிறப்பை மகாகவி பாரதியின் கவிதை மூலம் கூறி நாட்டு மக்களிடையே உரையாற்றிய மோடி.

நரேந்திர மோடி பிரதாராக பதவியேற்றபின், 2014 ம் ஆண்டு ஆரம்பமானது (மனதின் குரல்) “மான் கி பாத்” நிகழ்ச்சி ஒவ்வொருமாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தமிழ்மொழி உள்பட 18 மொழிகளில் உள்பட உரை நிகழ்த்துவார். இன்று 59 வது மான் கி பாத் நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதில் பேசிய அவர் அயோத்தி தீர்ப்பில் நாட்டு மக்களிடையே நீதித்துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் ஒழுக்கங்கள் எல்லாவற்றிற்கும் மேலாது என தெரிவித்தார்.

இந்திய நாட்டின் கலாச்சாரம், மொழிகளின் சிறப்பு குறித்து விரிவாக பேசிய மோடி ரங் சமூகம் எப்படி சமூக ஊடங்கங்களை பயன்படுத்தி தங்களது தாய்மொழியை உயிர்ப்பித்தது என்பதை பற்றி கூறும் போது 19ம் நூற்றாண்டை சேர்ந்த புலவர் மகாகவி பாரதி மொழி குறித்து படியுள்ளதாகவும், பாரதியின் கவிதையை மேற்கோள் காட்டி “முப்பது கோடி முகமுடையாள்,இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்” என தமிழில் பாடியது மட்டுமல்லாமல், அதன் பொருளை இந்தியிலும் விளக்கினார்.

இக்கவிதையின் பொருளாவது, “இந்தியாவிற்கு பல முகங்கள் இருந்தாலும், அதற்கு உருவம் ஒன்று எனவும் 18க்கும் மேற்பட்ட மொழிகள் இருந்தாலும் அதன் எண்ணம் ஒன்று” என சுட்டிக்காட்டியுள்ளார். தமிழில் பிரதமர் மோடி காட்டும் ஆர்வத்தை பார்த்தால் அடுத்த தேர்தல் வரும் போது தமிழி பேசி ஓட்டுக்கேட்டாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.

திடீரென சாலையில் வீசப்பட்ட பணக்கட்டுகள் !!! வாரிச்சென்ற பொதுமக்கள்…

Quick Share

வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு பயந்து, கட்டுக்கட்டாக பணத்தை சாலையில் வீசிய தனியார் நிறுவனம், பணத்தை கண்ட மக்கள் அள்ளிச்சென்றனர்.

மேற்குவங்கம் :கொல்கத்தாவில் உள்ள பென்டின்க் சாலையில் ,ஹாக் மெர்கன்டைல் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது . இந்த நிறுவனத்தில் வரி முறைகேடு நடப்பதாக தகவல் வெளிவந்ததை அடுத்து இங்கு வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருக்கும்போதே ,அதிகாரிகளுக்கு பயந்து பதுக்கிவைக்கப்பட்ட 100, 500,மற்றும் 2000 ரூபாய் தாள்களை 6வது மாடியில் இருந்து சாலையில் தூக்கி வீசியள்ளனர்.

பண்டல் பண்டலாக வீசப்பட்ட பணத்தின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது. கட்டுக்கட்டாக சாலையில் விழுந்த பணத்தை கண்ட வியந்த பொதுமக்கள் முண்டியடித்துக்கொண்டு அதனை அள்ளிச்சென்று மாயமாக மறைத்துள்ளார். இதனால் அங்கு எவ்வளவு பணம் வீசப்பட்டது என்பது குறித்து தகவல் வருமானவரித்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

மொபைல் செயலி மூலம் மக்களின் தொடர்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!!

Quick Share

கடந்த மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “Ak” என்ற செயலியை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இந்த செயலியின் மூலம் சுமார் 20,000கும் மேல் ஆர்வலர்கள் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் பங்கஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரண்டே மாதத்தில் 50,000கும் மேற்பட்டோர் இச்செயலியை தரவிறக்கம் செய்துள்ளதாக தெரிவித்தார். இந்த செயலியின் மூலம் நாங்கள் மக்களுடன் நேரிடையாக தொடர்பில் இருக்கிறோம். அத்துடன் இதன் மூலம் எங்கள் தரப்பின் கருத்துக்களை மக்களுக்கு உடனடியாக கூற முடிகிறது. இதனால் மக்களின் கருத்துகளையும் நாங்கள் எளிதில் அறிய பாலமாக உள்ளது. இச்செயலியில் ஆர்வலர்கள் இரண்டு மணி நேரம் ஒவ்வொரு நாளும் செலவிட்டாலே போதும்”, என்றார்.

ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக பரப்பப்படும் கருத்துக்களை ஒழிக்கவே இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் கெஜ்ரிவால் இக்கருத்துகளுக்கு இந்த செயலியின் மூலம் பதிலளிப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்ட சபை தேர்தல் இருப்பதால் கெஜ்ரிவால் “AK ” செயலியின் மூலம் மக்களிடம் தொடர்பில் இருப்பது மிகவும் அவசியமாக உள்ளது என்று பத்திரிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எந்தவித இணையதள தாக்குதலும் நடத்த முடியாது – ஜிதேந்...

Quick Share

புது டெல்லி: சில வாரங்களுக்கு முன்பு கூடங்குளத்தில் உள்ள அணு உலையில் உள்ள கணினிகளில் இணையத்தளம் தாக்குதல் நடந்ததாக செய்திகள் வெளிவந்தது. திமுக வின் தலைவர் திரு முக ஸ்டாலின், இணையதள தாக்குதல் நடத்தப்பட்டது உண்மையா? என மத்திய அரசிடம் விளக்கம் கோரினார். இது போன்று கேள்விகள் எழுந்த நிலையில். பிரதமர் அலுவலக இணைய அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்துள்ளார்.

“இணைய தங்குதல் நடக்கும் போது அணு, உலை பகுதிக்கு செல்ல விடாமல் தடுக்கும் வழிமுறைகள் உள்ளன. மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் மிகவும் பாதுகாப்பான முறையில் உலை கட்டமைக்கப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் உள்ள அணு உலையில் எந்தவிதமான இணைய தாக்குதலும் நடத்த முடியாது” என கூறினார்.

வங்கியில் மோசடியை தடுக்க 3.38 லட்சம் வாங்கிக்கணக்குகள் முடக்கம்: நிர்மலாசீதாராமன் தகவல்

Quick Share

கடந்த 6மாதத்தில் பொதுத்துறை வங்கிகளில்
ரூ.95,760.49 கோடி மோசடி

நவம்பர் 18ம் தேதி தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடரில், கடந்த 6 மாதகாலத்தில், பொதுத்துறை வங்கிகளில் ரூ.95,700 கோடி அளவுக்கு மோசடிகள் நடந்ததாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்தது.

இது குறித்த கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், ரிசர்வ் வங்கி தகவலில் படி கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை, 5,743வாங்கி மோசடிகள் நடந்துள்ளன எனவும், பொதுத்துறை வங்கிகளில் ரூ.95,760,49 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இதுபோன்ற வங்கி மோசடிகளை தடுக்க விரிவான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தெரிவித்தார் .இதன் முதற்கட்டமாக, செயல்பாட்டில் இல்லாத 3.38 லட்சம் நிறுவனங்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.




You cannot copy content of this Website