அரசியல்

“கமல்,ரஜினி,விஜய் போன்றோர் கனல் நீர் போல காணாமல் போவார்கள் ” நடிகர் அஜித் க...

Quick Share

சென்னை சாந்தோமில் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார்  அரசியலில் கமல், ரஜினி,விஜய் போன்றவர்கள் மாயபிம்பங்கள் அவர்களை  நம்புபவர்கள் ஏமாற்றப்படுவார்கள்,என விமர்சித்துள்ளார் .

கமல் 60 எனும் விழாவில் ரஜினி பேசும்போது ,தான் அரசியலுக்கு வருவார் என ஒருபோதும் எடப்பாடி நினைத்திருக்க மாட்டார் என விமர்சித்தார். இதற்கு கமலின் ஆதரவு தெரிவித்து பேசினார் . மேலும் இயக்குனர் எஸ் வி சந்திரசேகர் பேசுகையில் அரசியலில் கமலும் ,ரஜினியும் தனது தம்பிக்கு வழிவிடவேண்டுமென மறைமுகமாக நடிகர் விஜயை குறிப்பிட்டார் .இதனால் அதிமுகவினர் கமல் , ரஜினி,விஜய் ஆகிய மூவரையும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசியல் பிரச்சனை குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருது தெரிவித்தார் .அதில் அ தி மு க கூட்டணி முன்பு ரஜினி கமல் இணைப்பு  எல்லாம் தூள்தூளாகும், கமல்,ரஜினி ,விஜய் போன்றோர் மாயபிம்பங்கள் ,கானல் நீர் போல காணாமல் போவார்கள் ,அவர்களை நம்பி பின்னால் செல்லும் இளைஞர்கள் ஏமார்ந்து போவார்கள் என அதிரடியாக விமர்ச்சித்துள்ளார் .

மேலும் ,நடிகர் அஜித் தொழிலில் மட்டும் கவனம் செலுத்தும் கண்ணியமானவர் ,நேர்மையான நடிகர் என புகழாரம் சூட்டியுள்ளார் .  

மாண்புமிகு தமிழக முதல்வர் இன்று ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தார்.

Quick Share

காய்ச்சல் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று காலை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் என்ற முறையிலும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக கட்சி நிறுவனர் என்ற வகையிலும் அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து நலம் விசாரித்தார. அப்போது அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி சம்பத் உடனிருந்தனர். மேலும், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முன்னாள் எம்பி பாரதி மோகனையும் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்.

உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கும் இச்சமயத்தில் முதல்வரின் இந்த சந்திப்பு பாட்டாளி மக்கள் கட்சியினுடனான ஆதிமுக நட்பு வலுவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இணைந்த கைகள்: ரஜினி-கமல்! ஒரு வேலை இவரோட பிளான் தானா இது ? என பேசப்படும் அந்த நபர் யார் ?

Quick Share

சென்னை: நேற்று கமல் ஹசன் ஒடிசாவில் இருந்து கவுரவ டாக்டர் பட்டம் பெற்று சென்னை திருப்பினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல் ஹாசன் தமிழ் நாட்டின் நலனுக்காக தான் ரஜினிகாந்துடன் இணைந்து செயல்பட தயார் என கூறினார். மேலும் ரஜினிகாந்த் அவர் தரப்பிலும் கமலுடன் நான் கை கொற்கை தயார் என்று கூறி அரசியல் வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்தார்.

சமீபத்தில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ரஜினி மற்றும் கமலை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அரசியல் சாணக்கியன் எனப்படும் பிரசாந்த் கிஷோர் இந்த இணைத்த கைகள் பின்னனியில் இருக்கிறாரோ என அரசியல் வட்டாரம் முழுவதும் பேசப்படுகிறது.

“அண்ணன் திருமா மீது வைக்கப்படும் தரம் தாழ்த்தும் பிற்போக்காரர்களின் எண்ணம் ஒருபோ...

Quick Share

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் அக்கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் இந்து கடவுளை அவதூறாக பேசியது பெரும் சர்ச்சையானது. இதனால் கோபமடைந்த இந்து அமைப்பினர் திருமாவளவன் மீது புகாரளித்தனர் . மேலும் அவர் மேல் பாஜக அமைப்பினர்கள், நடிகை காயத்திரி ரகுராம் போன்றோர் சமூக வலை தளங்களில் கடுமையாக விமர்சனத்தை வைத்தனர் .

இந்நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் திருவளவனிற்கு ஆதரவாக தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் , ” ஒரு கருத்தை பற்றி எதிர்வைக்கப்படும் விமர்சனம் விவாதத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இங்கு விமர்சனங்களாக வசைகள், தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவதூறுகள் நிகழ்த்தப்படுவது இவர்களுக்கு பண்பாடாகவே இருக்கிறது .அண்ணன் திருமா அவர்களை தரம் தாழ்த்தும் பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறப்போவதில்லை” என குறிப்பிட்டுள்ளார்.




You cannot copy content of this Website