விளையாட்டு

“2020-ஐபிஎல்” 332 கிரிக்கெட் வீரர்கள் ஏலம் – ராபின் உத்தப்பாவின் விலை...

Quick Share

2020-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ள 332 வீரர்களில் பெயர்கள் வெளிவிடப்பட்டுள்ளன.

2020ம் ஆண்டு நடைபெறும் போட்டிக்காக, கொல்கத்தாவில் வரும் 19 ம் தேதி நடக்கவுள்ள நிகழ்ச்சியில் 8 ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள், தங்களது அணிக்கு தேவைப்படும் வீரர்களை ஏலம் எடுக்க தயாராகியுள்ளனர். இந்நிலையில் ஐபிஎல் விளையாட்டில் ஏலம் விட பதிவு செய்யப்பட்டுள்ள 997 கிரிக்கெட் வீரர்களில் 332 வீரர்களின் பெயர்களையும், அவர்களின் அடிப்படை விலைகளையும் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

இதில் ராபின் உத்தப்பாவின் அடிப்படை விலையாக 1.5 கோடி ரூபாயை இந்திய கிரிக்கெட் வாரியம் நிர்ணயித்துள்ளது. மேலும் பியூஸ் சாவ்லா, யூசுப் பதான், உனத்கத் ஆகியோரின் அடிப்படை விலையாக 1 கோடி ரூபாயை நிர்ணயித்துள்ளது.

“காயத்தில் இந்தியாவின் முக்கிய வேகப்பந்து பந்து வீச்சாளர் ” வெஸ்ட் இண்டீஸ் ...

Quick Share

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

இந்திய அணியின் முக்கிய கிரிக்கெட் வீரரான புவனேஸ்வர் குமார் கடந்த 2 ஆண்டுகளாகவே அடிக்கடி காயத்தினால் பாதிக்கப்பட்டுவருகிறார். 2018ம் ஆண்டில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரிலும் காயம் காரணமாக பங்கேற்க முடியாமல் போனது. 2019 ம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் மற்றும் ஐபிஎல்-இல் ஆடிய அவர் உலகக்கோப்பை ஆட்டத்தின் நடுவே காயத்தின் காரணமாக பாகிஸ்தான் போட்டியில் இருந்து வெளியேறினார். அதற்கு பின் உலக கோப்பை அரையிறுதி போட்டியில் மீண்டும் ஆடினார். மீண்டும் காயம் படவே தென்ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச தொடரில் பங்கேற்கவில்லை. புவனேஸ்வருக்கு தொடர்ந்து காயம் ஏற்பட்டு வருவதால் பலரும் அவரது காயத்தை இந்திய அணி நிர்வாகம் சரிசெய்யவில்லை என புகார் கூறினார். புவனேஸ்வருக்கு எப்படி பட்ட காயம் என்பது பற்றியும் பிசிசிஐ எந்த தகவலையும் வெளியிடாமல் மர்மமாகவே நீடிக்கிறது.

இந்நிலையில் மீண்டும் அவர் குணமானார், என தற்போது டி-20 தொடரில் விளையாடினார்.மூன்றாவது டி20 தொடரின் ஆட்டத்தின் போது புவனேஸ்வருக்கு மீண்டும் காலில் காயம் பட்டது. சாதாரணமான காயமாக இருந்தாலும் ஓய்வு எடுக்கவேண்டுமென அறிவுரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் புவனேஸ்வர் குமார் நிச்சயமாக ஒரு நாள் தொடரில் பங்கேற்கமாட்டார் என தெரிகிறது. அவரை அணியில் இருந்து நீக்குவதற்கும் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. புவனேஸ்வர் குமார் நீக்கப்பட்டால் அவருக்கு பதிலாக நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. மேலும் ஷர்துல் தாக்குர், கலீல் அஹ்மது ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

“நெருக்கடியான சூழலில் இந்திய அணியில் விளையாடி வருகிறேன்” வாய்ப்பு கிடைப்பதி...

Quick Share

நான் இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில்தான் விளையாடுகிறேன் வீரர் கே.எல்.ராகுல் பேட்டியில் தெரிவித்தார்.

நேற்று மும்பையில் நடைபெற்ற மூன்றாவது டி-20 போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் தொடரை வெற்றிபெற்றது. நேற்றயப்போட்டிகளில் தொடக்க ஆட்டநாயகனாக களமிறங்கிய ரோஹித், கே.எல்.ராகுல் மாற்றம் விராட் கோலி ஆகிய வீரர்களில் அபார ஆட்டத்தால் இந்திய அணி வெற்றிபெற்றது. விராட் தொடர் ஆட்டநாயகனுக்காக விருதும், கே.எல்.ராகுல் ஆட்டநாயகன் விருதும் பெற்றனர். இப்போட்டியில் கே.எல்.ராகுல் வெறும் 56 பந்துகளிலேயே 91 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினார்.

அதற்கு பின் பேட்டியளித்த கே.ல்.ராகுல். “இந்திய அணியில் எனக்கு நெருக்கடி இல்லை என நான் சொல்ல மாட்டேன். எந்தவொரு வீரனும் அணியில் நிரந்தர இடம் பிடிக்கவே விரும்புவான். ஒவ்வொரு தொடரின் போது வருவதும், போவதுமாக இருந்தால் அது எந்த ஒரு வீரனுக்கும் எளிதானதாக இருக்காது. இதில் பிசிசிஐ மற்றும் கேப்டன் எடுக்கும் முடிவுதான் இறுதி. அதே நேரம் இருதோண்ற நெருக்கடியான சூழல் வருவது அனைத்து வீரனுக்கும் சகஜம். இவற்றை எல்லாம் எதிர்கொண்டால் தான் நன்றாக விளையாட முடியும். எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நான் பயன்படுத்தி என்னை நிரூபிப்பேன். மேலும் டி-20 தொடரை பொறுத்தவரை வீரர்களின் நம்பிக்கை மற்றும் மனநிலையை பொறுத்ததுதான் என்றார்.

கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வரும் இவருக்கு இதுவரை டி-20மற்றும் ஒரு நாள் தொடரில் நிரந்தரமாக இடமில்லை. இந்த தொடரில்கூட கே.எல்.ராகுல் வீரர் தவான் என்பவருக்கு காயம் ஏற்பட்டதால் தான் காலமிறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. டி-20 தொடரின் மூன்று போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியதால் தரவரிசை பட்டியலில் 9ம் இடத்திலிருந்து 6ம் இடத்திற்கு கே.எல்.ராகுல் தற்போது முன்னேறியுள்ளார்.

இந்தியாவுடன் பிங்க் -பால் டெஸ்ட் விளையாட தயார்- உறுதியளித்த ஆஸ்திரேலியா

Quick Share

ஆஸ்திரேலியா தனது ஒவ்வொரு தொடரின் போது பகல் இரவு டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியாவிலேயே நடத்திவருகிறது. ஆனால் ஆஸ்திரேலியா அணி கடந்த ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா சென்ற போது டெஸ்ட் போட்டியில் பிங்க் பாலில் விளையாட மறுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதன் முறையாக வங்கதேச அணிக்கு எதிரான பகல் -இரவு போட்டியில் பிங்க் பாலில் விளையாட சம்மதித்து விளையாடியுள்ளது. இதனால் 2020-2021 ம் ஆண்டு தொடரின் போது ஆஸ்திரேலியா அணி இந்தியாவுடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா அணி விளையாடுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆஸ்திரேலிய அணியின் தலைமை நிர்வாகியான கெவின் ராபர்ட்ஸ் கூறும்போது, 2020-2021ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா வரும் போது நிச்சயமாக ஒரு பிங்க் பால் தொடரில் விளையாடுவோம் என உறுதியளித்தார். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி சிறப்பாக விளையாடிவருவதால், அவர்கள் 2021ம் ஆண்டின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விடுவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது.

“250 கோடி கிரிக்கெட் சூதாட்டம்” சசிகலாவின் பினாமியும் சிக்கினார் சூதாட்ட கு...

Quick Share

சென்னையில் கிரிக்கெட் நடந்து கொண்டிருக்கும் வேளையில் சென்னை, பெங்களூரு போன்ற இடங்களில் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக கிரிக்கெட் வாரிய தலைவர் சௌரவ் கங்குலிக்கு தகவல்கள் வந்திருப்பதாக தெரிகிறது. தமிழக பிரிமியரில் விளையாடும் தூத்துக்குடி டீமை வைத்து ஏறத்தாழ 250 கோடி அளவுக்கு “பெட் “கட்டி சூதாட்டம் நடைபெற்றதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் உரிமையாளர் சிறையில் உள்ள சசிகலாவின் பினாமி என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாடு பிரிமியர் லீக்கிலும், கர்நாடகா பிரிமியர் லீக்கிலும் சூதாட்டம் நடந்துவருவதாக தொடர்ந்து புகார்கள் வருவதால் கங்குலி தலைமையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு பிரிமியர் லீக்கின் சூதாட்டத்திற்கு முக்கிய காரணமாக, இந்தியா சிமெண்ட்ஸ் ‘சீனிவாசன் மற்றும் தமிழ் நாடு கிரிக்கெட் வாரிய நிர்வாகி பழனி ஆகியோர் இருப்பதாக அகில இந்திய கிரிக்கெட் வாரியம் கார்னர் செய்கிறது. தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தற்போது சிமெண்ட்ஸ் ‘சீனிவாசனின் மகள் ரூபா. எனவே அவர்களை நோக்கி விசாரணை படைகள் படையெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு பிரிமியர் லீக்கை தடை செய்யவும் திட்டமிடுவதாக ஒரு புறம் தகவல் வெளியாகின்றன.

விராட் கோலியின் அசுர தாண்டவம் !! 3வது T20 போட்டியில் இந்தியா அபார வெற்றி ! !

Quick Share

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இன்று மும்பை வாக்கெண்டே ஸ்டேடியத்தில் நடந்தது. முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 240 ரன் குவித்தது. ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடியது. அதிகபட்சமாக KL ராகுல் 56 பந்துகளில் 9 பவுண்டரி 4 சிக்ஸர் அடித்து 91 ரன் குவித்தார், ரோஹித் ஷர்மா 34 பந்துகளில் 6 பவுண்டரி 5 சிக்ஸர் அடித்து 71 ரன் குவித்தார். கேப்டன் விராட் கோலி அசுர வேகத்தில் ரன் குவித்தார். 29 பந்துகளில் 4 பவுண்டரி 7 சிக்ஸர் விளாசி 70 ரன் குவித்தார். விராட் கோலி ஆட்டத்தை கண்டு அரங்கமே ஆர்ப்பரித்தது.

240 என்னும் கடினமான இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஆட்டக்காரர் ஏமாற்றத்துடன் வெளியேறினார் மறுமுனையில் பொல்லார்ட் சிறப்பாக விளையாடி கொண்டிருந்தார் 39 பந்துகளில் 68 ரன் குவித்தார். 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 173 ரன் 8 விக்கெட் இழந்து இந்தியாவிடம் பரிதாபமாக தோற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது

400 சிக்ஸர் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோஹித் சர்மா !!

Quick Share

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையே 3வது T20 போட்டி இன்று மும்பையில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் KL ராகுல், ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 135 ரன் சேர்த்தனர்.

முதல் இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடாத ரோஹித் சர்மா இன்று அதிரடியாக ஆடி 34 பந்துகளில் 5 சிக்ஸர் 6 பவுண்டரியுடன் 71 ரன் குவித்தார். இதை போட்டியின் மூலம் அதிக சிக்ஸர் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த போட்டிக்கு முன்பு 399 சிக்ஸர் அடித்திருந்தார். இன்று அடித்த முதல் சிக்ஸர் மூலம் 400 சிக்ஸர் அடித்த மயில் கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார். உலக அளவில் இந்த மையில் கல்லை எட்டிய மூன்றாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இடத்தில் கெயில் 534 சிக்ஸர் உடன் மற்றும் அப்ரிடி 476 சிக்ஸர் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

#BREAKING டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை தேர்வு செய்தது

Quick Share

இந்திய – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3வது T20 இறுதி போட்டி இன்று மும்பையில் உள்ள வாக்கெண்டே ஸ்டேடியத்தில் நடக்கிறது. இரு அணிகளும் சரிசமமாக 1-1 என்ற கணக்கில் உள்ளனர்.

மும்பையில் நடக்கும் 3வது போட்டியில் யார் ஜெயிக்கிறார் என்பதில் தான் தொடரின் வெற்றி அடங்கியுள்ளது. செய்தியாளர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பிஹில் சிம்மோன்ஸ் பேசுகையில், மும்பை மைதானத்தை பற்றி பொல்லார்ட், சிம்மோன்ஸ் நன்கு அறிவார்கள், ஏனென்றால் அவர்கள் மும்பை அணிக்காக ஐபிஎல்-ல் பலமுறை வெவ்வேறு சூழ்நிலைகளில் ஆடியுள்ளார், ஆகவே இவ்விருவரும் இன்று நடக்க இருக்கும் போட்டியில் சிறப்பாக செயல்படுவார்கள் என கூறினார்.

இந்திய அணி தரப்பில் ரிஷப பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் வெளியேற்றப்பட்டனர், மேலும் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், குலதீப் யாதவ் களம் இறங்கவுள்ளனர்.

2020 நியூஸிலாந்திற்கு எதிராக களமிறங்க காத்திருக்கும் ஹார்திக் பாண்டியா ! சிகைச்சைக்கு ப...

Quick Share

இந்தியாவின் நட்சத்திர அதிரடி வீரரான ஆல்-ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா முதுகு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன்பு லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனையில் பாண்டியாவிற்கு முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சை முடித்து சுமார் 5 மாத இடைவெளிக்கு பிறகு பாண்டியா சர்வதேச போட்டியில் விளையாடுவார் என கூறப்பட்டிருந்தது.

தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார், மேலும் அவர் தான் T20 உலக கோப்பையில் விளையாட தன்னை தயார் செய்து கொள்வதாக கூறினார். உடல் அளவில் தகுதி பெறுவதுடன் மனதளவில் தன்னை தயார் செய்துகொண்டிருப்பதாக கூறினார். மேலும் அடுத்த ஆண்டு நியூஸிலாந்து உடன் நடக்கவிருக்கும் போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

#Breaking பொல்லார்ட், சிம்மோன்ஸ் மும்பை மைதானத்தை பற்றி நன்கு அறிந்தவர்கள் ! INDvWI

Quick Share

இந்திய – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3வது T20 இறுதி போட்டி இன்று மும்பையில் உள்ள வாக்கெண்டே ஸ்டேடியத்தில் நடக்கிறது. இரு அணிகளும் சரிசமமாக 1-1 என்ற கணக்கில் உள்ளனர். மும்பையில் நடக்கும் 3வது போட்டியில் யார் ஜெயிக்கிறார் என்பதில் தான் தொடரின் வெற்றி அடங்கியுள்ளது. செய்தியாளர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பிஹில் சிம்மோன்ஸ் பேசுகையில், மும்பை மைதானத்தை பற்றி பொல்லார்ட், சிம்மோன்ஸ் நன்கு அறிவார்கள், ஏனென்றால் அவர்கள் மும்பை அணிக்காக ஐபிஎல்-ல் பலமுறை வெவ்வேறு சூழ்நிலைகளில் ஆடியுள்ளார், ஆகவே இவ்விருவரும் இன்று நடக்க இருக்கும் போட்டியில் சிறப்பாக செயல்படுவார்கள் என கூறினார்.

தற்போது திறமையான கேப்டன்ஷிப் கொண்டிருக்கும் பொல்லார்ட் தங்களது அணிக்காக கடுமையாக உழைத்திருக்கிறார். தன் அணியில் உள்ள அனைவரையும் புரிந்து கொண்டு அவர்களின் பலத்தை பயன்படுத்துகிறார். முதல் போட்டியில் 200+ அடித்தும் தோல்வியுற்றாலும் இரண்டாம் போட்டியில் சிம்மோன்ஸ் அபாரமாக விளையாடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்பின் வெளிப்பாடு: 4 வயது சிறுமிக்கு போட்டிக்கான டிக்கெட்டை கொடுத்தார் !!

Quick Share

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையே நடக்கும் T 20 தொடரில் 2 போட்டிகள் முடிந்துள்ளன இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளது இறுதி போட்டி இன்று மும்பையில் உள்ள வாஙக்ஹெடே மைதானத்தில் நடக்கிறது. இரு அணிகளும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் திருவனந்தபுறத்தில் நடத்த போட்டியின்போது வெஸ்ட் அணி மூத்த வீரரும், விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்டின் இரண்டாவது போட்டிக்கு புறப்படும்போது நின்றுகொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு போட்டிக்கான டிக்கெட் மற்றும் சிறிய பரிசை வழங்கினார். இந்த நிகழ்வை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

மோசமாக பில்டிங் காரணமாக இந்தியா தோல்வியடைந்தது !வெஸ்ட் இண்டீஸ் பதிலடி !!!

Quick Share

பந்துவீச்சு மற்றும் பில்டிங் ரொம்ப மோசமாக இருந்ததால் வெஸ்ட் இண்டிஸ்யிடம் தோற்றது இந்தியா.

இந்திய – வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன இரண்டாவது T20 போட்டி இன்று திருவந்தபுரத்தில் கிரீன் பீல்ட் மைதானத்தில் நடந்துகொண்டிருக்கிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். பேட்டிங் ஆடிய இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 என்னும் இலக்கை நிர்ணயித்தது. இந்தியாவின் ஷிவம் துபே 30 பந்துகளில் 3 பவுண்டரி 6 சிக்ஸர் அடித்து 54 ரன் குவித்தார், அவருக்கு ஈடாக ரிஷப பண்ட் நிதானமாக விளையாடி 22 பந்துகளில் 33 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கேஷ்ரிக் வில்லியம்ஸ் 4 ஒவேரில் 30 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

இரண்டாவதாக ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடியது லெண்டேல் சிம்மோன்ஸ் அதிகபட்சமாக 45 பந்துகளில் 67 ரன் 4 பவுண்டரி 4 சிக்ஸர் அடித்தார். 18.3 ஓவர் முடிவில் 172 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.




You cannot copy content of this Website