விளையாட்டு

டெஸ்ட் போட்டியில் வார்னர் முச்சதம் அடித்து அசத்தல்

Quick Share

பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் முச்சதம் அடித்துள்ளார். டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி 389 பந்துகளில் தனது முதல் முச்சதத்தை விளாசினார். இதில் 37 பவுண்டர்களும் அடங்கும்.இதன்மூலம் 299 ரன்கள் அடித்து அடிலெய்டு மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்று புரிந்திருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேனின் சாதனையை வார்னர் முறியடித்தார்.

ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் சாதனை..

Quick Share

பகலிரவு டெஸ்டில் பாகிஸ்தானுக்கு எதிராக முச்சதம் அடித்து அசத்தியுள்ளார் ஆஸி. தொடக்க வீரர் டேவிட் வார்னர். ஆஸ்திரேலிய அணி 127 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தார் ஆஸி. கேப்டன் டிம் பெயின். வார்னர் 335, வேட் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.


இந்நிலையில் இந்த இன்னிங்ஸில் 7000 டெஸ்ட் ரன்களைக் கடந்தார் ஸ்மித். 126 இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை அவர் அடைந்துள்ளார். இதன்மூலம் இதற்கு முன்பு அதிவிரைவாக 131 இன்னிங்ஸ்களில் 7000 ரன்களைக் கடந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் டபிள்யூ.ஆர். ஹேமண்ட்டின் சாதனையை ஸ்மித் முறியடித்துள்ளார்.

ரிஷாப் பண்ட்-க்கு வார்னிங் ! பார்மில் உள்ள சஞ்சு சாம்சன்

Quick Share

இந்தியாவின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் VVS லட்சுமண் நேற்று செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் ரிஷாப் பண்ட் தன்னுடைய இடத்தை சரியாக தக்கவைத்துக்கொள்ள நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும், அவர் அதை தக்க வைத்துக்கொள்ள தவறவிட்டார் என கூறினார்.

தற்போது வெஸ்ட் இன்டெஸ் எதிராக நடக்கவிருக்கும் 3 போட்டிகள் கொண்ட T20 போட்டியில் சஞ்சு சாம்சன் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்திய அணியில் ரிஷாப் பண்ட் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. 50 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரிஷாப் பண்ட்-க்கு போதிய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும் அதை நழுவ விட்டார்.

சமீபத்தில் நடத்த டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பர் வ்ரிதிமான் சஹாவிற்கு கையில் அடிபட்டு ஓய்வில் உள்ளார். தற்போது வலுவான நிலையில் இருக்கும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் அணியில் தன்னுடைய திறமையை நிரூபித்து அணிக்கு பக்கபலமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கி எழும் பாண்டியா! சிகிச்சைக்கு பின் மைதானத்திற்கு திரும்பினார்.

Quick Share

இந்தியாவின் நட்சத்திர வீரரான ஆல்-ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா முதுகு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மதம் லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனையில் பாண்டியாவிற்கு முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சை முடித்து சுமார் 5 மாத இடைவெளிக்கு பிறகு பாண்டியா சர்வதேச போட்டியில் விளையாடுவார் என கூறப்பட்டிருந்தது.

தற்போது ஹர்டிக் பாண்டியா உடற்பயிற்சியில் தீவிரமாக தன்னை தயார் படுத்திவருகிறார். தான் நீண்ட காலம் மருத்துவமணையில் செலவிட்டதாக மேலும் தற்போது மைதானத்திற்கு திரும்பி பயிற்சியில் ஈடுபடுவது மிகவும் சந்தோஷமாக உள்ளது என கூறினார். தன்னுடைய. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிற்சி மேற்கொள்ளும் விடீயோவையும் வெளியிட்டுள்ளார்.

அதிரடியாக களமிறங்கும் சஞ்சு சாம்சன் ! வெளியேறிய தவான் ! – வெஸ்ட் இண்டீஸ் T20

Quick Share

சஞ்சு சாம்சன் தனது திறமையை வெஸ்ட் இண்டீஸ் எதிராக T20 தொடரில் நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் துவக்க ஆட்டக்காரரான தவான் வெஸ்ட் இண்டீஸ் எதிரான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடமாட்டார் என அறிவித்தது BCCI. சூரத்தில் நடந்த சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான போட்டியில் மஹாராஷ்டிராவிற்கு எதிராக ஆடிய ஷீகர் தவானின் இடது காலில் ஆழமாக வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதன் மூலம் அவர் காயம் குணமாகும் வரை விளையாடமாட்டார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

இப்போது தவானுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் அணியில் அதிரடியாக இடம்பிடித்துள்ளார். சாம்சன் சமீபத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரின் அணியில் இருந்தார் ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மறுமுனையில் அதே டெஸ்ட் போட்டியில் விளையாடிய வ்ர்ரிதிமான் சக கைவிரலில் அடிபட்டு வெளியேறினார், மும்பையில் சஹாவிற்கு அறுவை சிகிச்சை முடிந்தது குறிப்பிடத்தக்கது.

”சின்ன தல” ரெய்னா பர்த்டே டுடே ..HAPPY BIRTHDAY ..

Quick Share

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ”சின்ன தல” என்று தமிழக கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ரெய்னா இன்று தனது 32- வது பிறந்தநாள் விழாவினை கொண்டாடுகிறார் .

இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்த முதல் வீரர் ரெய்னா. தோனி தலைமையிலான இந்திய அணியில் நட்சத்திர வீரராக ஜொலித்தவர் ரெய்னா. பேட்டிங், ஃபீல்டிங் என இரண்டிலுமே அசத்திய ரெய்னா, பார்ட் டைம் பவுலராகவும் சில ஓவர்களை வீசி விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடியவர். ஆல்டைம் பெஸ்ட் ஃபீல்டர்களில் ஒருவராக ஜாண்டி ரோட்ஸே ரெய்னாவை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

ஒருகாலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தவர் சுரேஷ் ரெய்னா (32). அவருடைய அபாரமான ஆட்டத்தால் பலமுறை இந்திய அணியின் வெற்றிக்கு உதவி உள்ளார். தற்போது 2019 உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

இந்நிலையில் இன்று தனது 32 வது பிறந்த நாள் விழாவினை கொண்டாடும் இவர்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன . ரெய்னாவிற்கு, பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், “ரெய்னா களத்தில் இறங்கினால் உற்சாகம் பிறக்கும்” என்று தனக்கே உரிய பாணியில் அதிரடியாக ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள், இந்நாள் வீரர்களும் சுரேஷ் ரெய்னாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

மாஸ்ஸாக களமிறங்கும் தல தோனி ! ஆசியா லெவென் அணியில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படு...

Quick Share

மார்ச் 2020- ல் வங்கதேசத்தில் உலக லெவென் அணிக்கும் ஆசிய லெவென் அணிக்கும் இடையே இரண்டு T 20 போட்டிகள் நடைபெற உள்ளது. ஆசிய லெவென் சார்பில் இந்திய வீரர்கள் 7 பேர் தேர்வு செய்யவுள்ளனர். இந்த 7 பேர்களில் தோனி விளையாடுவர் என தகவல் கசிந்துள்ளது. தற்போது தோனி பயிற்சியில் தன்னை தயார் படுத்திக்கொண்டிருக்கிறார். தோனி ஐபில் 2020 போட்டியில் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐபில் முன்பு வங்கதேசத்தில் நடக்கும் போட்டியில் தனது பார்மை நிரூபிப்பார் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்தியா சார்பில் ஆசிய லெவென் அணியில் 7 வீரர்கள் பங்கேற்க வேண்டுமென்று இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வங்கதேசம் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்காட்லாந்து ஓபன் பேட்மிட்டன்: சாம்பியன் பட்டத்தை வென்றார் இந்தியாவின் லக்ஷ்சயா சென்

Quick Share

ஸ்காட்லாந்து சர்வதேச ஓபன் பேட்மிட்டன் கிளாஸ்க்கோ நகரில் நடைபெற்றது, பல்வேறு நாட்டிலிருந்து முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவை சேர்த்த 18 வயது நிரம்பிய லக்ஷ்சயா சென் சிறப்பாக செயல்ப்பட்டு இறுதி போட்டிற்கு முன்னேறினார். இறுதி போட்டியில் பிரேசில் வீரர் யுகோர் கோல்ஹோவை எதிர்கொண்டார். 56 நிமிடங்கள் பரபரப்பாக நடந்த போட்டியில் இந்திய வீரர் லக்ஷ்சயா சென் 18-21, 21-18, 21-19 செட் கணக்கில் யுகோர் கோல்ஹோவை வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

லக்ஷ்சயா சென் இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடத்த 3 மாதத்தில் 4 பட்டங்களை வென்றுள்ளார். சார்லொஸ் ஓபன், டச் ஓபன், பெல்ஜியன் ஓபன் தற்போது ஸ்காட்லாந்து தொடர்ச்சியாக வென்றுள்ளார். லக்ஷ்சயா சென்- க்கு இந்தியா முழுவதும் பாராட்டுக்கள் குவிகிறது.

சீனாவில் சாதித்த இந்தியாவின் சிங்கப்பெண் “மனு பாக்கர்”. ISSF துப்பாக்கி சுட...

Quick Share

“புதிய உலக சாதனையுடன்
தங்கம் வென்ற இந்தியாவின் மனு பாக்கர் “..!!

சீனா: உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் தங்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார் .

சீனாவில், புதியான் நகரில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் இறுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனு பாக்கர் மகளிருக்கான 10 மீட்டர் ஜூனியர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதிப்போட்டியில், தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் 17 வயதான மனு, 244.7 புள்ளிகளை பெற்ற அவர் இளையோர் பிரிவில் உலக அளவில் புதிய சாதனையையும் படைத்துள்ளார் .

இந்த சாதனை மூலம் அவர் 2020ம் ஆண்டு நடைபெற டோக்கியோவில் உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை ஹீனா சித்துவிற்கு பிறகு மனு தங்கம் வென்று பெருமைசேர்த்துள்ளார். இந்த ஆண்டில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும்.




You cannot copy content of this Website