“2007-ல் மூடிவைத்த அரசியல் மர்மம்” 2018ல் இளம்பெண் உடலை தோண்டி எடுத்து விசாரணை- சிபிஐ அதிரடி!!!
ஆந்திராவில் பாலியல் வன்கொடுமையால் இறந்த இளம்பெண்ணின் சடலத்தை 12 ஆண்டுகளுக்கு பின் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதபரிசோதனை செய்யும் சிபிஐ, அரசியல் வாதிகளின் தலையீட்டால் மூடிய சம்பவம் தற்போது வெளிவர தொடங்கியுள்ளது.
ஆந்திராவில் தெனாலி பகுதியைசேர்ந்த ஆயிஷா மீரா, விஜயவாடாவில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். தீடிரென ஒரு நாள் அவர் தனது விடுதி கழிப்பறையில், உடல் முழுவதும் காயங்களுடன், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இந்த சம்பவம் கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்றது இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைப்பின் போலீசார் நடத்திய விசாரணையில் சத்யம் பாபு என்பவர், அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது அம்பலமானது. இதனையடுத்து அந்த நபரை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த விஜயவாடா மகிளா நீதிமன்றம் அந்த நபருக்கு 2010ம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கியது. ஆனால் அந்த நபரை 2017ல் அம்மாநில உயர்நீதிமன்றம் விடுவித்தது.
இந்த வழக்கில் அரசியல் வாதிகளின் தலையீடு இருப்பதாக எழுந்த புகாரால் இந்த வழக்கை 2018ம் ஆண்டு சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய சிபிஐ, தற்போது இறந்த அந்த இளம்பெண்ணின் பெற்றோரின் சம்மதத்தோடும், வருவாய்த்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் உதவியுடனும், 12 ஆண்டுகளுக்கு பின்னர் அவரின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தினர். 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உயிர் பெற்றுள்ள இந்த வழக்கு தீவிரமடைந்துள்ளதால் இதில் பல முக்கிய குற்றவாளிகள் சிக்குவார்கள் என நம்பப்படுகிறது.