டெல்லி மக்களை குண்டு வைத்து கொள்வது தான் சிறந்த வழி என உச்ச நீதிமன்றம் கூறியது!!

November 25, 2019 at 11:55 pm
pc

டெல்லி : டெல்லியில் நிலவி வரும் காற்று மாசுபாட்டால் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.இப்பாதிப்பு இந்த வருடம் மட்டும்  நடப்பதில்லை மாறாக  கடந்த பல வருட காலங்களாக நிலவி கொண்டு வருகிறது.ஒவ்வொரு வருடமும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் டெல்லி அரசும் மத்திய அரசும் எடுத்து வருகின்றன.

இந்த ஆண்டின் காற்று மாசுபாடு கடந்த ஆண்டுகளை விட பெருமளவில் காணப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது முறையாக டெல்லி காற்று மாசுபாட்டு  வழக்கை  நீதிபதி அருண் மிஸ்ரா , தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தனர்.விசாரணையில் எவ்வித பயன்தரும் திட்டங்களை கொண்டு வராமல் மக்களை கேஸ் பெட்டகத்தில் வாழும்படி வலியுறுத்துவது தவறானது என சுட்டிக்  காட்டி  இதற்கு பதிலாக டெல்லி மக்களை குண்டு வைத்து முழுமையாக கொல்வேதே சிறந்தது என நீதிபதி அமர்வு வருந்திக் கூறினர்.    

உச்ச நீதிமன்றம் உத்தரவு இட்ட பிறகும் ,பஞ்சாப் ஹரியான  போன்ற மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பது தொடர்ந்து காணப்படுகிறது.  டெல்லி காற்று மாசுபாட்டிற்கும் என்சிஆர் பகுதிகளில் வாழும் மக்களின் மூச்சு திணறலுக்கும்  அது முக்கிய  காரணமாக  அமைகிறது.  இதனால் அவர்களின் ஆயுட்காலம் குறைந்து வருவதாக குற்றம்  சாட்டியது உச்ச நீதிமன்றம்.

இதனை கண்டித்த உச்ச நீதிமன்றம் மத்திய மாநில அரசின்  வேறுபாட்டை களைத்து காற்று மாசுபாட்டை கட்டுபடுத்தும் கோபுரங்களை அமைக்க 10 புதிய திட்டங்களோடு வர வலியறுத்தியது  குறிப்பிடதக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website