தோனி தனது மனைவி சாக்க்ஷியுடன் ராஞ்சியில் வாக்களித்தார் – ஜார்க்கண்ட் தேர்தல் களம் 3-ம் கட்டப் போட்டி துவங்கியது!!
தோனி தனது மனைவி சாக்க்ஷியுடன் ராஞ்சியில் வாக்களித்தார்! ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டமனற தேர்தலுக்கான 3-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை நடைபெற்றது.
நக்சல்கள் தாக்குதல் அதிகம் உள்ள காரணத்தால் பாதுகாப்பு கருதி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. முதல் கட்ட சட்டமன்ற தேர்தல் 13 தொகுதிகளுக்கு நவம்பர் 30ம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்ட சட்டமன்ற 20 தொகுதிகளுக்கு தேர்தல் டிசம்பர் 7ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் அறிவிக்கப்பட்டபடி மூன்றாம் கட்ட சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 3 மணிவரை நடைபெறவுள்ளது. இந்த மூன்றாம் கட்ட தேர்தலில் 17 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தலைநகர் ராஞ்சி, ஹாடியா, ராம்கார்ஹ், கான்கே ஆகிய தொகுதிகளில் மாலை 5 மணி வரையும் நக்சல்களால் பாதிக்கப்பட்ட மற்ற தொகுதிகளில் பாதுகாப்புக்கருதி மாலை 3 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் மாநில அமைச்சர்கள் சிபி சிங், நீரா யாதவ், ஜார்கண்ட் விகாஸ் மோச்சா தலைவர் பாபு லால் மராண்டி உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் போட்டியிடுகிறார்கள். பிரதமர் மோடி பாஜகவுக்கு ஆதரவாகவும், ராகுல் காந்தி காங்கிரசுக்கு ஆதரவாகவும் தீவிர பிரச்சாரத்தில் ஒருபக்கம் வருகிறார்கள். மேலும் நக்சல் தாக்குதல் அதிகம் உள்ள இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. துணை ராணுவப்படை, மாநில போலீசார் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர். 5 கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவு வரும் 23ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.