ஐபிஎல்: டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் ஓனர் இனிமே இவர்தானா ? !! விலைக்கு வாங்கும் கெளதம் கம்பிர்..
பாஜக மக்களவை உறுப்பினரும், இந்திய அணியின் முன்னாள் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரருமான கவுதம் காம்பிர், ஐபிஎல் அணியை விலைக்கு வாங்கஉள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஓய்வு பெற்ற முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் காம்பிர், தற்போது பாஜக கட்சியின் மக்களவை உறுப்பினராக இருந்துவருகிறார். இவர் 2017ம் ஆண்டு வரை ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்காக விளையாடிவந்தார். பின்னர் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதால் கொல்கத்தா கிரிக்கெட் அணியில் இருந்து விலகினார். 2018ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக கேப்டனாக களமிறங்கி விளையாட தொடங்கினர். பின்னர் டெல்லி அணி தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்ததால் தாமாகவே முன்வந்து கேப்டன் பதவியிலிருந்து விலகினார்.
திடீரென அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக கவுதம் காம்பிர் அறிவித்தார். ஒரு வருட இடைவெளிக்கு பிறகு, அரசியல் களத்தில் குதித்தார். டெல்லியில் பாஜக கட்சியின் சார்பில் போட்டியிட்ட அவர் மக்களவை உறுப்பினராகவும் தேர்வானார். தற்போது டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் உரிமையாளர்களாக ஜி.எம்.ஆர்.குரூப் ,ஜேஎஸ்டபிள்யூ குரூப் ஆகியவை உள்ளன .இரண்டு குரூப்களும் தலா 50%பங்குகள் வைத்துள்ளன . ஜி.எம்.ஆர்.குரூபிடம் இருக்கும் 50% பங்குகளில் இருந்து 10% பங்குகளை தற்போது கவுதம் காம்பிர் வாங்கப்போவதாக பேச்சுவார்த்தைகள் நடந்துவந்தன. இந்த 10 % பங்குகளின் மதிப்பு சுமார் 100 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஜி.எம்.ஆர்.குரூப் சம்மதித்தால் உடனடியாக அதற்க்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.