5வது நாளாக முடங்கியது HDFC ஆன்லைன் சேவை!! தொடரும் புகார்கள் !! கண்டுகொள்ளாத நிறுவனம் !! அதிருப்தியில் வாடிக்கையாளர்கள்…
இந்தியாவில் உள்ள பிரபல தனியார் வங்கிகளில் ஒன்றான HDFC வங்கியில் தொழில் நுட்பக்கோளாறு காரணமாக நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் வசதி 2ம் தேதி திங்கட்கிழமை தொடங்கி கடந்த 5 நாட்களாக தொடந்து முடங்கியுள்ளது. இது குறித்த புகார்கள் தொடந்து சமூக வலைத்தளங்களில் பரவலாக காணப்பட்டது. இதனால் சுமார் 45 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஊதிய நாட்களிலும், பணப்பரிமாற்றம் செய்ய முடியாமல் பெரும் சிரமங்களை சந்தித்ததாக பதிவிட்டு வந்துள்ளனர்.
இதனை உடனே சரிசெய்கிறோம் சிரமத்திற்கு மன்னிக்கவும் என்று தெரிவித்த HDFC பேங்க் கடந்த 4 ம் தேதி சேவையை சரிசெய்தது, இருந்தும் சரியாக ஆன்லைன் சேவைகளை சரிவர தொடர முடியவில்லை. மீண்டும் வாடிக்கையாளர்களிடம் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் இது குறித்து HDFC பேங்க் தரப்பில் இருந்து இன்னும் எந்த விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து சமூக வலைத்தளமான ட்விட்டரில் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர் .
இந்தியாவில் பிரபலமான இந்த ஹெச்.டி.எப்.சி பேங்கிற்கு மற்ற தனியார் வங்கிகளை காட்டிலும் வாடிக்கையாளர்கள் அதிகம் .இதனால் இந்த வங்கியின் பங்குகள் வீழ்ச்சியில் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.