#INDvsSL 3வது T20: அதிரடியாக ஆடிய இந்தியா !! இலங்கைக்கு 202 இலக்கு !!

இந்தியா – இலக்கை இடையேயான 3 T20 போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்து கொண்டிருக்கிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பில்டிங் செய்ய தீர்மானனித்தது. முதலில் களமிறங்கிய ராகுல், தவான் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் அரை சதம் அடித்தார்கள். KL ராகுல் 36 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸர் அடித்து 54 ரன் குவித்தார். தவான் 36 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸர் அடித்து 52 ரன் எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சன் 6 ரன்னில் வெளியேறினார். விராட் கோலி 26 ரன் எடுத்தார்.
மனிஷ் பாண்டே, ஸ்ருடுல் தாகூர் இறுதியில் அதிரடியாக ஆடினார்கள் ஷுர்டுல் தாகூர் 8 பந்துகளில் 1 2 சிக்ஸர் அடித்து 22 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார், மனிஷ் பாண்டே 18 பந்துகளில் 4 பவுண்டரி அடித்து 31ரன் குவித்தார். 20 ஓவர் முடிவில் இந்தியா 201 எடுத்து 6 விக்கெட் இழந்தது. கடைசி 4 ஓவரில் அதிரடியாக ஆடி 59 ரன் எடுத்தது இந்தியா. இலங்கைக்கு 202 என்னும் இலக்கை நிர்ணயித்தது இந்தியா.