காத்து வாக்குல 3 காதல்!!… ஒரே நேரத்தில் 3 பெண்களுடன் திருமணம் செய்த 42 வயது நபர்…
மத்திய பிரதேசத்தில் ஒருவர் மூன்று பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட அரிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள நன்பூரில் பழங்குடி வகுப்பை சேர்ந்த சமர்த் மவுரியா(42) என்பவர் வெவ்வேறு காலக்கட்டத்தில் மூன்று பெண்களை காதலித்து வந்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளாக மூன்று பெண்களுடனும் லிவ்-இன் உறவு முறையில் வாழ்ந்து வந்துள்ளார். இதன்மூலமாக 6 குழந்தைகளும் பிறந்துள்ளது. ஆனால், பழங்குடியின முறைப்படி ஒருவர் திருமணம் செய்யவில்லை எனில் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது.
இதன் காரணமாக மூவரையும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தார் சமர்த் மவுரியா. அதன்படி, கடந்த ஏப்.,30ம் தேதி தனது ஆறு குழந்தைகள் முன்னிலையில் மூவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ளார். இந்த நிகழ்வில் அப்பகுதி மக்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.