1 லட்சம் இளைஞர்களுக்கு வேளை -அதிரடி அறிவிப்பு அளித்த முன்னணி நிறுவனம்!
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் பெரும் சிக்கலில் தவித்து வருகின்றனர். குறிப்பாக வாழ்வாதாரம் இழந்து இதுவரை சந்திக்காத பிரச்னைகள், சவால்களை எதிர்கொண்டனர். ஏராளமானோர் வேலை இழந்தனர். இதனால் வேலையில்லாவோர் சதவிகிதம் அதிகரித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சர்வதேச அளவில் கவனம் பெறும் ஐ.டி நிறுவனம் இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த ஆண்டில் ஒரு லட்சம் பேரை வேலைக்கு எடுக்க காக்னிசன்ட் திட்டமிட்டிருக்கிறது.
ஐடி நிறுவனங்களில் வெளியேறுவோர் விகிதம் காக்னிசன்ட்டில் அதிகமாக இருக்கிறது. அதனால், கூடுதல் பணியாளர்களை எடுக்க அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதில் 30,000 பேர் படித்து முடித்து புதிதாக (fresher ) வேலை தேடுபவர்கள். மீதமுள்ளவை அனுபவம் வாய்ந்தவர்களை எடுக்க காக்னிசன்ட் திட்டமிட்டிருக்கிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு 45,000 புதியவர்களை வேலைக்கு எடுக்க திட்டமிட்டிருக்கிறது காக்னிசன்ட் நிறுவனம்.
கடந்த இரு ஆண்டுகளில் நிறுவனத்தில் புதிய பணியாளர்களை நியமனம் செய்துவந்தாலும் 1.2 லட்சத்துக்கும் மேலான நபர்கள் வெளியேறி இருக்கிறார். கடந்த மார்ச் காலாண்டில் வெளியேறுவோர் விகிதம் 21 சதவீதமாக இருக்கிறது. அதுவே ஜூன் காலாண்டில் 31 சதவீதம் அளவுக்கு வெளியேறுவோர் விகிதம் இருந்தது. இந்த காலாண்டில் 23,300 நபர்கள் வெளியேறி இருக்கிறார்கள்.
கடந்த மூன்று மாதத்தில் தினமும் 350 – 380 பணியாளர்கள் வரை வெளியேறி இருக்கிறார்கள். கடந்த காலாண்டு முடிவில் 3,01,200 பணியாளர்கள் உள்ளனர்.
ஆனால், இதே காலத்தில் டிசிஎஸ் (8.6%) விப்ரோ (15.5%), இன்ஃபோசிஸ் (13.9%) மற்றும் ஹெச்.சி.எல். டெக் (11.8%) ஆகிய நிறுவனங்களில் மிகவும் குறைவாகவே பணியாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள். வெளியேறும் பணியாளர்களில் பெரும்பாலானோர் நடுத்தர மற்றும் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர் என நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிரைன் ஹம்ரிஸ் தெரிவித்திருக்கிறார்.