ஜார்க்கண்ட் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்கு பதிவு இன்று காலை துவங்கியது.

December 7, 2019 at 8:17 am
pc

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது, ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு.

கடந்த 2014ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் முடிவு, அந்த ஆண்டு, டிசம்பர் 23ம் தேதி வெளியானது. இதில் பாஜக மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 42 தொகுதிகளை வென்று, ஆட்சியை கைப்பற்றியது. பாஜகவின் இவ்வெற்றி. மாநில சட்டசபையில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றது இது முதல் தடவையாகும்.

ரகுபர் தாஸ் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 10 வது முதல்வராக 2014 டிசம்பர் 28 அன்று பதவியேற்றார். இன்று நடைபெறும் தேர்தலில், முதல்வர் ரகுபர்தாஸ், கிழக்கு ஜாம்ஷெட்பூர் தொகுதியில், போட்டியிடுகின்றார். இரண்டாம் கட்டமாக, 20 தொகுதிகளில், ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இத்தொகுதிகளில், மொத்தம், 47 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஓட்டுப்பதிவையொட்டி, மத்திய துணை ராணுவப் படை, போலீசார் உட்பட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

இந்த வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். அணைத்து கட்ட தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 23-ஆம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website