பெண்களே!! ஆபத்து நேரத்தில் உதவும் “காவலன்” செயலி: எப்படி யூஸ்-பண்ணனும் ? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க !!

என்ன சட்டம் இருந்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கின்றன. கடந்த மாதம் நடைபெற்ற தெலுங்கானா பாலியல் சம்பவம் நாடுமுழுவதும் தீயாய் பற்றியது. எனவே பல மாநிலங்களும், பெண்களை பாதுகாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக காவல்துறை பெண்களை காக்கும் மொபைல் செயலியான “காவலன் SOS”-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் அழைக்கப்படும் பெண்களுக்கு சில நிமிடங்களிலேயே காவல்த்துறையின் பாதுகாப்பு கிடைத்து விடுகிறது. எனவே தற்போது தமிழகத்தில் உள்ள காவல் துறையினர் இந்த செயலியை டவுன்லோடு செய்து பயன்பெறுமாறு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
“காவலன் SOS” பயன்படுத்துவது எப்படி: கூகுள் playstrore-ல் சென்று “காவலன் SOS” என்ற ஆப் -ஐ டவுன்லோடு செய்து ஓபன் செய்தவுடன், இந்த ஆப்-பிற்கு ஆடியோ ரெக்கார்டிங், வீடியோ ரெகார்டிங் அவசியம் என்பதால் அதற்கு ஓகே கொடுத்துவிடவும். பின்னர் வசதியான மொழியினை (தமிழ்/ஆங்கிலம்) தேர்வு செய்யவேண்டும். அதன் பின் தமிழக காவல் முத்திரையுடன் கூடிய பதிவு பக்கத்தில், தங்களது பெயர், மொபைல் எண், மாற்று எண் (உங்கள் பெற்றோர் அல்லது உங்களுக்கு நம்பிக்கையானவர்கள் ஆகியோரின் 3 எண்களை இதில் பதிவு செய்துகொள்ளும் வசதி உள்ளது) பதிவிட்டு ஓகே கொடுக்கவும் அடுத்தது next ஐ கிளிக் செய்து அடுத்த பக்கத்தில் உங்களது பாலினம், பிறந்த தேதி, வீட்டு முகவரி, e-mail id போன்ற தகவல்களை பதிவு செய்யவேண்டும். அதன் பின் உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP எண்ணை பதிவு செய்தால், காவலன்-ஆப் பயன்படுத்த ரெடி ஆகிவிடும்.
இதன் பின் நீங்கள் ஆபத்தாக உணரும் சூழ்நிலையில் ,”காவலன் SOS “ஐ ஓபன் செய்தால் நடுவில் வரும் சிவப்பு வண்ணத்தில் “SOS ” எனேவ வரும் ஆப்ஷனை அழுத்தவும். SOS என்பது save our souls, save our ships என்ற உதவி கேட்கும் குறியீடாகும். SOS பட்டனை அழுத்தியவுடன் GPS இயங்க ஆரம்பித்துவிடும், போனில் உள்ள உங்கள் கேமரா தானாக இயங்கி வீடியோ எடுத்து காவல் துறைக்கு அனுப்பிவிடும். இதில் இணையவசதி இல்லாத நேரத்திலும் நீங்கள் இந்த பட்டனை அழுத்தினால் போதும் காவல் துறைக்கு தகவல் (SMS) செல்லும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. உங்கள் போனில் உள்ள GPS இயங்குவதால் தகவல் சென்ற சில நிமிடங்களிலேயே காவல் துறையில் உள்ள அதிகாரிகள் நீங்கள் உள்ள இடத்தை கண்டுபிடித்து உங்களை வந்து காப்பாற்றி விடுவார்கள். இந்த “SOS “பட்டனை தேவையில்லாமல் அழுத்தவேண்டாம். இதனால் தேவை இல்லாமல் காவல்துறையில் நேரம் வீணாகும். இதுவரை 5லட்சத்திற்கும்மேற்பட்டோர் இந்த ஆப்பை டவுன்லோடு செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

