கொடைக்கானலில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 57 வயது முதியவர் கைது !

மதுரை திருமங்கலத்தை சேர்த்தவர் பாண்டி (வயது 57). இவருடைய மகள் வசந்தி கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா நகரில் குடியிருக்கிறார். கர்ப்பமாய் இருக்கும் தனது மகள் வசந்தியின் வளைகாப்பிற்கு வந்த பாண்டி. வசந்தியின் வீட்டில் அருகே வசிக்கும் அக்கம் பக்கத்தினர் வளைகாப்பிற்கு வருகை தந்துள்ளனர். இதில் பக்கத்துக்கு வேட்டை சேர்ந்த 4 வயது சிறுமியை வீட்டில் உள்ள தனி அறையில் கொண்டு சென்று பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.

அறையில் துன்புறுத்தலுக்கு உள்ளன சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதால். கதவை திறந்து அருகில் இருந்தவர்கள் கையும் களவுமாக பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வந்த புகாரின் பேரில், ஆய்வாளர் பாண்டி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர்.