கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எந்தவித இணையதள தாக்குதலும் நடத்த முடியாது – ஜிதேந்திர சிங்
புது டெல்லி: சில வாரங்களுக்கு முன்பு கூடங்குளத்தில் உள்ள அணு உலையில் உள்ள கணினிகளில் இணையத்தளம் தாக்குதல் நடந்ததாக செய்திகள் வெளிவந்தது. திமுக வின் தலைவர் திரு முக ஸ்டாலின், இணையதள தாக்குதல் நடத்தப்பட்டது உண்மையா? என மத்திய அரசிடம் விளக்கம் கோரினார். இது போன்று கேள்விகள் எழுந்த நிலையில். பிரதமர் அலுவலக இணைய அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்துள்ளார்.
“இணைய தங்குதல் நடக்கும் போது அணு, உலை பகுதிக்கு செல்ல விடாமல் தடுக்கும் வழிமுறைகள் உள்ளன. மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் மிகவும் பாதுகாப்பான முறையில் உலை கட்டமைக்கப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் உள்ள அணு உலையில் எந்தவிதமான இணைய தாக்குதலும் நடத்த முடியாது” என கூறினார்.