“முப்பது கோடி முகமுடையாள், உயிர்மொய்ம்புற ஒன்றுடையாள்” பாரதி கவிதையில் இந்தியாவின் பெருமையை சொன்ன மோடி!!!

November 25, 2019 at 10:57 am
pc

இந்தியாவின் மொழிகளின் சிறப்பை மகாகவி பாரதியின் கவிதை மூலம் கூறி நாட்டு மக்களிடையே உரையாற்றிய மோடி.

நரேந்திர மோடி பிரதாராக பதவியேற்றபின், 2014 ம் ஆண்டு ஆரம்பமானது (மனதின் குரல்) “மான் கி பாத்” நிகழ்ச்சி ஒவ்வொருமாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தமிழ்மொழி உள்பட 18 மொழிகளில் உள்பட உரை நிகழ்த்துவார். இன்று 59 வது மான் கி பாத் நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதில் பேசிய அவர் அயோத்தி தீர்ப்பில் நாட்டு மக்களிடையே நீதித்துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் ஒழுக்கங்கள் எல்லாவற்றிற்கும் மேலாது என தெரிவித்தார்.

இந்திய நாட்டின் கலாச்சாரம், மொழிகளின் சிறப்பு குறித்து விரிவாக பேசிய மோடி ரங் சமூகம் எப்படி சமூக ஊடங்கங்களை பயன்படுத்தி தங்களது தாய்மொழியை உயிர்ப்பித்தது என்பதை பற்றி கூறும் போது 19ம் நூற்றாண்டை சேர்ந்த புலவர் மகாகவி பாரதி மொழி குறித்து படியுள்ளதாகவும், பாரதியின் கவிதையை மேற்கோள் காட்டி “முப்பது கோடி முகமுடையாள்,இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்” என தமிழில் பாடியது மட்டுமல்லாமல், அதன் பொருளை இந்தியிலும் விளக்கினார்.

இக்கவிதையின் பொருளாவது, “இந்தியாவிற்கு பல முகங்கள் இருந்தாலும், அதற்கு உருவம் ஒன்று எனவும் 18க்கும் மேற்பட்ட மொழிகள் இருந்தாலும் அதன் எண்ணம் ஒன்று” என சுட்டிக்காட்டியுள்ளார். தமிழில் பிரதமர் மோடி காட்டும் ஆர்வத்தை பார்த்தால் அடுத்த தேர்தல் வரும் போது தமிழி பேசி ஓட்டுக்கேட்டாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website