பாரதியாரின் பிறந்தநாளான இன்று அவரை போற்றி பிரதமர் மோடி ட்வீட் !

December 11, 2019 at 10:21 am
pc

தமிழ் கவிதைகள் மற்றும் நேர்கொண்ட சிந்தனையாலும் மக்களின் மனதில் இன்னும் வாழ்ந்துகொண்டிருப்பவர் பாரதியார். இவரின் கவிதையை பாடிய மழலை பருவம் தான் பெரும்பாலானோருக்கு ஞாபகத்தில் வரும். பாரதியாரின் பிறந்தநாளான இன்று அவரின் கவிதை ஒன்றை தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டு நினைவு கூர்ந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அந்த பதிவில் பாரதியாரின் தேச பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர். அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன என நினைவு கூர்ந்தார்.

மேலும் “தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்னும் எழுச்சியூட்டும் வரிகள் மூலம் பாரதியாரின் பார்வை மற்றும் மக்கள் மீது அவர் கொண்டுள்ள நேசம், அக்கறை போற்றும் விதமாக அமைந்திருக்கும். பாரதியாரின் வரிகளை போற்றி பதிவிட்டுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website