புதிய அறிவிப்பு :”24 மணிநேரமும் NEFT பண பரிமாற்றம் செய்யலாம்” – ரிசர்வு வங்கி

December 7, 2019 at 5:49 pm
pc

வரும் 16 ம் தேதி முதல் 24 மணிநேரமும் மின்னணு பணப்பரிமாற்றம் செய்யலாம் என ரிசர்வு வங்கி அறிவித்துள்ளது.

NEFT எனப்படும் தேசிய மின்னணு பணபரிமாற்ற முறை டிசம்பர் 16ம் தேதி முதல் 24 மணிநேரமும் செயல்படுமென ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. தற்போது விடுமுறை நாட்களை தவிர்த்து வாராந்திர நாட்களிலும், முதல் மற்றும் ஐந்தாம் சனிக்கிழமைகளிலும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் இந்த மின்னணு பணபரிமாற்ற முறை நடைமுறையில் உள்ளது.

தற்போது வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஆண்டு முழுவதும் இந்த சேவை 24 மணிநேரமும் தொடரவுள்ளது. விடுமுறை நாட்களிலும் 24 மணிநேரமும் செயல்படும் என ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த புதிய செயல்முறைக்காக வங்கி அலுவலக நேரம் முடிந்த பிறகும் 24 மணிநேர தேசிய மின்னணு பணபரிமாற்ற சேவை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website