வங்கியில் மோசடியை தடுக்க 3.38 லட்சம் வாங்கிக்கணக்குகள் முடக்கம்: நிர்மலாசீதாராமன் தகவல்

November 20, 2019 at 11:25 am
pc

கடந்த 6மாதத்தில் பொதுத்துறை வங்கிகளில்
ரூ.95,760.49 கோடி மோசடி

நவம்பர் 18ம் தேதி தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடரில், கடந்த 6 மாதகாலத்தில், பொதுத்துறை வங்கிகளில் ரூ.95,700 கோடி அளவுக்கு மோசடிகள் நடந்ததாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்தது.

இது குறித்த கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், ரிசர்வ் வங்கி தகவலில் படி கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை, 5,743வாங்கி மோசடிகள் நடந்துள்ளன எனவும், பொதுத்துறை வங்கிகளில் ரூ.95,760,49 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இதுபோன்ற வங்கி மோசடிகளை தடுக்க விரிவான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தெரிவித்தார் .இதன் முதற்கட்டமாக, செயல்பாட்டில் இல்லாத 3.38 லட்சம் நிறுவனங்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website