குடியுரிமை மசோதா பார்லிமென்டிற்கு இழைக்கப்பட்ட அவமானம் !! ப சிதம்பரம் ஆவேசம் !!

December 11, 2019 at 5:05 pm
pc

மத ரிதியாக துன்புறுத்தப்படுபவர்களுக்கு மட்டுமே குடியுரிமை என இந்த மசோதாவில் அறிவிக்கப்பட்டது ஏன் ?

நாடு முழுவதும் குடியுரிமை மசோதாவை எதிர்த்து போராட்டங்கள் நடந்துவருகின்றன. இன்று குடியுரிமை மசோதாவில் இலங்கை மற்றும் பூட்டானை சேர்க்காதது ஏன் என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமை மசோதா மீதான விவவகரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், இந்த குடியுரிமை மசோதா பார்லிமென்டிற்கு இழைக்கப்பட்ட அவமானம். மேலும் குடியுரிமை மசோதாவிற்குஎதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்போது, இது சட்ட விரோதம் என அறிவிக்கப்படும்.

இந்த மசோதாவை குறித்து அட்டர்னி ஜெனரல் கருத்தை கேடீர்களா ? அவரை இங்கு அழைத்து வந்து பேச விடுவதற்கு மத்திய அரசிற்கு தைரியம் உள்ளதா ? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இந்த அரசின் குடியுரிமை மசோதா ஹிந்துத்வவை முன்னிறுத்துவதாக உள்ளதாக இருக்கிறது. மேலும் நீதிமன்றங்கள் தான் நாட்டை காப்பாற்ற வேண்டும் என ஆணித்தனமாக கூறினார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website