தொண்டர்கள் என்னோடு தான் யாரும் தடுக்க முடியாது! – மீண்டும் பரபரப்பை கிளப்பிய சசிகலா.

June 16, 2021 at 6:02 am
pc

மதுரையை சேர்ந்த குபேந்திரன் என்ற ஆதரவாளரிடம் சசிகலா பேசிய ஒலிப்பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்சிக்காரர்கள் எல்லாம் மிகவும் வருத்தப்படுகிறீர்கள். தொண்டர்கள் எல்லாரும் என்னுடன் இருக்கும்போது, கட்சியை அழிய விடமாட்டேன். விரைவில் தொண்டர்களை சந்திக்க வருகிறேன்.

1987-ம் ஆண்டு எம்ஜிஆர் இறந்தபோது ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சினையை உடன் இருந்து எதிர்கொண்டுள்ளேன். அதில் இருந்து மீண்டு வந்துதான் ஆட்சியை அமைத்தோம்.

எனவே, இவர்கள் செய்வது எல்லாம் எனக்கு புதிது இல்லை. ஜெயலலிதாபோல நாமும் தொண்டர்களுடன் வந்து காட்டி, ஆட்சியையும் அமைப்போம். நான் கட்சி பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website