சபரிமலைக்கு செல்ல மும்பையில் இருந்து கொச்சி வந்தார் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் !!

November 26, 2019 at 2:49 pm
pc

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்க்காக கொச்சி விமான நிலையத்தை வந்தடைந்தார் பெண்ணிய செயற்பட்டாளரான திருப்தி தேசாய்.

கொச்சி: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதிப்பது என்பது தொடர்பான வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால் முன்னால் பிறப்பிக்க பட்ட அணைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற நிலையே தொடருகிறது. ஆனால் சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க மாட்டோம் எனவும், நீதிமன்ற அனுமதி பெற்று வரும் பெண்களுக்கு மட்டும் தான் பாதுகாப்பு தருவோம் எனவும் கேரளா அரசு தெரிவித்திருக்கிறது.

இதனைத்தொடர்ந்து பல பெண்கள் சபரிமலைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர் ஆனால் அவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு தர மறுத்து திருப்பி அனுப்பினர்.நேற்று முன்தினம் சமூக ஆர்வலரான பாத்திமா ரெஹானா சபரிமலை செல்ல பாதுகாப்பு கேட்டிருந்த நிலையில் போலீசார் மறுத்துவிட்டனர். இந்தநிலையில் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்வதற்காக பெண்ணிய செயற்பாட்டாளரான திருப்தி தேசாய், பிந்து மற்றும் 7 பேர் கொண்ட குழு மும்பையில் இருந்து கொச்சி விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேசாய், இன்று அரசியலமைப்பு தினம் என்பதால் எங்களை தடுத்து நிறுத்தினால் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடருவோம். நங்கள் சபரிமலைக்கு வருவது குறித்த தகவலை ஏற்கனவே முதலமைச்சர் மற்றும் டிஜிபிக்கு தெரிவித்து விட்டேன் . எனவே, எனக்கு பாதுகாப்பு அழிப்பது அரசின் கடமையாகும் என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சபரிமலைக்கு வந்த திருப்தி தேசாய் போலீசாரால் திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website