ஜாமீனில் வெளியே வந்த 2 ரேப்பிஸ்ட் அரங்கேற்றிய பதற வைக்கும் செயல்… கத்தியால் குத்தி, பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் – உ.பி,யில் !!!

December 7, 2019 at 11:07 am
pc

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் கடந்தாண்டு டிசம்பரில், சிவம் திரிவேதி, என்ற இரு இளைஞர்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். இதில் அப்பெண் குடுத்த புகாரின் பேரின் இருவரையும் காவல் துறை கைது செய்தது. நேற்று டாக்டர் பிரியங்கா ரெட்டி வழக்கில் கைதனவர்களுக்கு நடந்தது போல் என்கவுண்டர் செய்திருந்தால் அநியாயமாக அப்பெண் உயிர் பறிபோயிருக்காது.

கைதான இருவரும் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தனர். நேற்று முன்தினம் காலை இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு இளம்பெண் சென்றபோது, ஜாமீனில் வந்த 2 பேரும், அவர்களின் கூட்டாளிகள் மூவரும் அந்த பெண்ணை வழமறித்து தாக்கி தீ வைத்து விட்டு தப்பினர். அந்த வழியே சென்ற பொது மக்களும் அச்சத்தில் விலகி சென்றுள்ளனர். இதில், அப்பெண் 90 சதவீத தீக்காயம் அடைந்தார். அவர் மீட்கப்பட்டு, உடனடியாக டெல்லிக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்றிரவு 11.40 மணிக்கு சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்தார். குற்றவாளிகள் ஐந்து பேரையும் காவல் துறை சுற்றி வளைத்து கைது செய்தது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website