“வேற்றுமையில் ஒற்றுமை காண,அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும்” மாநிலங்களவையில் பேசிய வைகோ!

November 25, 2019 at 11:49 pm
pc

அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என மாநிலங்களவையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.

“வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்கு இந்திய அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும்” என மாநிலங்களவை கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ எம்.பி சட்ட முன்வரைவை அறிமுகம் செய்து பேசும் பொது கூறினார்.

இதன்பின், ஜி.எஸ்.டி வருமானத்தை பெருக்க மறுசீராய்வு குழுவை அரசு அமைத்து இருக்கிறதா? என்றும், இந்த வரிகளை வணிகர்கள் தன்னார்வத்துடன் வந்து கட்டுவதற்க்கான ஊக்குவிப்புகளை அரசு செய்கிறதா? எனவும் கேள்விகளை எழுப்பினார். இதற்கு நிதித்துறை இணைமந்திரியான அனுராக் தாக்குர் பதிலளித்தார். அந்த பதிலில் ஜி.எஸ்.டி வருமானத்தை பெருக்க மத்திய – மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க பட்டுள்ளதாகவும், ஒரு ஆண்டில் 1.1/2 கோடிக்கும் குறைவான பரிமாற்றங்கள் கொண்ட சிறு, குறு வணிகர்கள் கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு 1% மட்டும் வரி செலுத்தக்கூடிய தொகுப்பு தீர்வை திட்டம் உள்ளதாகவும், வரி செலுத்துவோருக்கு உதவியாக, ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு சிக்கல் இல்லாத வகையில் பணத்தை மாற்றுவதற்கு வழிமுறைகளையும் வெகுவிரைவில் அறிமுக படுத்துவதாகவும் இணைமந்திரி அனுராக் கூறினார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website