இசைப்புயல் இசையில் மிஷ்கின் உடன் இணையும் விஜய் சேதுபதி .

தமிழ் திரை உலகின் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் தற்போது திரைப்படங்களில் நடிப்பதிலும் பிஸியாக உள்ளார் என்பதும், குறிப்பாக விஜய்யுடன் அவர் நடித்த ’லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்பது தெரிந்ததே.

மேலும் அவர் ஏற்கனவே ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்த ’பிசாசு 2’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் தற்போது அடுத்த திரைப்படத்தை இயக்குவதற்கு தயாராகியுள்ளார். பிசாசு 2’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விஜய் சேதுபதி தான் மிஷ்கின் அடுத்த படத்தின் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் தற்போது விறுவிறுப்பாக ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மிஷ்கின், விஜய் சேதுபதி, ஏஆர் ரஹ்மான் என ஒரே படத்தில் மூன்று பிரபலங்கள் இணைந்துள்ளதால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.