ஊரடங்கு நேரத்தில் நேர்ந்த அவலம்.., 15 வயது சிறுமியின் கைகால்களை கட்டிப்போட்டு நள்ளிரவில் திருமணம்

January 8, 2021 at 12:03 pm
pc

இந்தியாவில் பல கிராமத்தில் மைனர் திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அரசாங்க விதிப்படி அரசு நிர்ணயித்த வயதைவிட குறைவானவர்களுக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என விதிகள் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் விதிகளை மீறி 15 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சனூர் என்ற பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமியை பாட்டி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நேற்று இரவு தனது அவருடைய கை கால்களை கட்டிவிட்டு வலுக்கட்டாயமாக இரவு 11 மணி அளவில் அவருடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்த கொடூரம் முடிந்து காலை விடிந்த பிறகு யாருக்கும் தெரியாமல் பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டை விட்டு வெளியே வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது அந்த சிறுமி அவருடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த சம்பவம் சமூக நலத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது காவல் துறையினர் அந்த சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website