ஒவ்வொரு விக்கெட்டிலும் எண்ணற்ற நினைவுகள்.., அஸ்வினை வாழ்த்திய உதயநிதி ஸ்டாலின்

December 20, 2024 at 11:03 am
pc

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உதயநிதி வாழ்த்து 

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர், கடந்த 2010 -ம் ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகம் செய்யப்பட்டார்.

இதுவரை இவர் 106 டெஸ்ட், 116 ஒருநாள், 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 765 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.

இந்நிலையில், ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “சென்னை முதல் உலக அரங்கு வரை தமிழகத்தையும் இந்தியாவையும் பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள் அஸ்வின்.

ஒரு கிரிக்கெட் வீரராக உங்கள் தாக்கம் எப்போதும் நினைவில் இருக்கும். ஒவ்வொரு விக்கெட்டிலும், ஒவ்வொரு போட்டியிலும், நீங்கள் விளையாட்டை உயர்த்தி, எண்ணற்ற நினைவுகளை எங்களுக்குக் கொடுத்தீர்கள். எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.  

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website