கணவரின் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட பெண் …மனதை உருக்கும் கடிதம்…

September 19, 2022 at 6:51 pm
pc

கேரளாவில் கணவன் அடித்து கொடுமைப்படுத்தியதால் தற்கொலை முடிவை எடுத்த பெண் 

தன்னை கணவர் மோசமாக நடத்தியதாக தற்கொலைக்கு முன் பெண் எழுதிய கடிதம் சிக்கியது 

இந்திய மாநிலம் கேரளாவில் பெண்ணொருவர் கணவரின் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவருக்கும் வழக்கறிஞரான கண்ணன் நாயர் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். 

அப்போது ஐஸ்வர்யா எழுதிய கடிதம் ஒன்று பொலிஸாருக்கு கிடைத்தது. அதில் ‘கணவர் என்னை அடிக்கடி அடிப்பார். என்னிடம் மோசமாக நடந்துகொள்வார். அவர் என்னை அன்பாக நடத்தியதே இல்லை. என்னை மோசமாக கொடுமைப்படுத்துவார். என் தாலியையும் அவர் அறுத்துவிட்டார். என் சம்பள பணத்தை எல்லாம் வாங்கிக்கொண்டு செலவிற்கு கூட பணம் தர மாட்டார். அவர் தான் என் மரணத்திற்கு காரணம்’ என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கண்ணன் நாயரை கைது செய்த பொலிஸார், அவரிடம் ஐஸ்வர்யா தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக வரதட்சணை கொடுமையால் விஸ்மயா என்ற பெண் தற்கொலை செய்துகொண்டது கேரள மாநிலத்தையே உலுக்கியது. 

அதன் பின்னர் வரதட்சணை கொடுக்க மாட்டோம், வாங்க மாட்டோம் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் கணவரின் கொடுமையால் மீண்டும் ஒரு பெண் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website