கண்கள் துடிப்பது நல்லதா? கெட்டதா?

இன்றைய பொதுநலம் பதிவில் கண்கள் துடித்தால் நல்லதா? கெட்டதா? என்று இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம். பொதுவாகவே அனைவருக்கும் கண்கள் சில நேரங்களில் துடிக்கும். கண்களில் இடது கண் துடித்தால்நன்மை நிகழ போகிறது என்றும், அதே வலது கண்கள் துடித்தால் தீயவை நடக்க போகிறது என்று நாமே முடிவு செய்து விடுகிறோம். கண் துடிப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. நம் கண்கள் துடிப்பதற்கு மிகவும் முக்கியமான காரணம் சரியான தூக்கமின்மை, மன அழுத்தம், உடலில் புரதச்சத்து குறைபாடு, மூளை சம்மந்தப்பட்ட பிரச்சனை, போதை பழக்கம், உடல் சோர்வு, கண்களுக்கு தொடர்ச்சியாக ஓய்வு இல்லாமல் வேலை கொடுப்பதால் கண்களின் ஓரத்தில் ஏற்படும் தசை அசைவு மற்றும் நரம்புகளும் கண்கள் துடிப்பதற்கு காரணம் என்று மருத்துவ ரீதியாக கூறுகின்றனர். கண்கள் துடிப்பதற்கு புராணங்களும், சங்க இலக்கியங்களிலும் சகுன பலன்கள் உள்ளன. சரி வாங்க இப்போது கண் துடித்தால் சாஸ்திரம் என்னென்ன பலன் கூறுகிறது என்று விரிவாக படித்தறியலாம்.

வலது புருவம் துடித்தால் என்ன பலன்: பண பற்றாக்குறை நீங்கி குடும்பத்தில் பணவரவு அதிகரிக்கும். இடது கண் புருவம் துடித்தால் என்ன பலன்: இடது கண் புருவம் துடித்தால் குழந்தையின்மை உள்ளவர்களுக்கு குழந்தை பிறக்க போகிறது என்று அர்த்தமாகும். மறுபுறம் சோகமான நிகழ்வும் ஏற்படலாம். புருவ மத்தி துடித்தால் என்ன பலன்: புருவ மத்தியானது துடித்தால் நமக்கு பிடித்தவர்களுடன் இருப்பது போன்ற வாய்ப்பு ஏற்படும் என்று சாஸ்திரம் கூறுகிறது.கண் நடுப்பாகம் துடித்தால் என்ன பலன்: கண் நடுப்பாகம் துடித்தால் மனைவியை பிரிந்து இருக்கும் நிலை ஏற்படும். வலது கண் துடித்தால் என்ன பலன்: வலது கண் துடித்தால் நாம் நினைத்த செயல்கள் வெற்றியில் முடியும். இடது கண் துடித்தால் என்ன பலன்: இடது கண் துடித்தால் மனைவியை பிரிந்து இருக்க வேண்டிய நிலை வரும். மேலும் சோகம் ஏற்படும். வலது கண் இமை துடித்தால் என்ன பலன்: வலது கண் இமை துடித்தால் மிகவும் சந்தோசமான செய்தி வரப்போகிறது என்று அர்த்தமாகும்.இடது கண் இமை துடித்தால் என்ன பலன்: இடது கண் இமை துடித்தால் வருதத்திற்குரிய செயல் ஏதேனும் நடக்கப்போகிறது என்று சாஸ்திரம் கூறுகிறது. வலது கண் கீழ் இமை துடித்தால் என்ன பலன்: வலது கண் கீழ் இமை துடித்தால் அடுத்தவர் செய்த பழியினை தாம் சுமக்க நேரிடும்.இடது கண் கீழ் இமை துடித்தால் என்ன பலன்: இடது கண் கீழ் இமை துடித்தால் கைகளில் பணவரவு தங்காமல் செலவுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.