கருகருன்னு அடர்த்தியான புருவம் வளர உங்க சமையல் கட்டில் இந்த 3 பொருட்கள் இருந்தால் போதுமே!!

January 7, 2023 at 4:24 am
pc

நேர்த்தியான புருவம் ஒரு பெண்ணுக்கு ரொம்பவும் அழகான தோற்றத்தை கொடுக்கும். நேர்த்தியான புருவம் கிடைக்க முதலில் புருவம் அடர்த்தியாக இருக்க வேண்டும். கருகருன்னு அடர்த்தியாக இருக்கும் புருவத்தை நேர்த்தியாக்கி பார்த்தால் முக அழகே முற்றிலுமாக மாறி ஆச்சரியப்படுத்தும். இந்த கரு கரு அடர்த்தியான புருவத்தை பெற நம்ம வீட்டு சமையல் கட்டில் இந்த 3 பொருட்கள் இருக்கணும். அது என்னென்ன? அதை வைத்து நாம் என்ன செய்யப் போகிறோம்? என்பதைத் தான் அழகு குறிப்பு பதிவாக இனி இக்கட்டுரையில் தொடர இருக்கிறோம்.

புருவ முடி எல்லோருக்கும் அடர்த்தியாக இருக்காது. ஒரு சிலருக்கு நல்ல கருகருன்னு அடர்த்தியாக அமைந்து பார்ப்பதற்கு அசிங்கமாய் தெரியும் அளவிற்கு இருக்கும் ஆனால் அவர்கள் புருவத்தை நேர்த்தி செய்யும் பொழுது அவ்வளவு அழகாக மாறிவிடுவார்கள். அதே போல நமக்கும் கருகருன்னு புதிய அடர்த்தியான முடிகள் வளர வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து என்ன செய்யலாம்? என்பதை பார்ப்போம்.
முதலில் நம்முடைய சமையல் கட்டில் எப்பொழுதும் விளக்கெண்ணெய் வைத்திருக்க வேண்டும்.
விளக்கெண்ணெய் உடலுக்கு உள்ளே மட்டுமல்லாமல், உடலுக்கு வெளியேயும் அதீத நன்மைகளை தரக்கூடியதாக இருக்கிறது. தினமும் இரண்டு சொட்டு விளக்கெண்ணையை தொப்புளில் தடவி தூங்கினால், நீங்கள் உடல் உஷ்ணத்தில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றினால் பார்வை நன்கு தெளிவடையும். தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்து பயன்படுத்தினால் தலைமுடி அடர்த்தியாக வளரும். அது போலவே புருவத்திலும் நீங்கள் விளக்கெண்ணையை தினமும் தூங்கும் முன்பு தடவிக் கொள்ள வேண்டும். பின் காலையில் எழுந்து குளிர்ந்த நீரினால் அதை துடைத்து விடுங்கள். இப்படி செய்து வர புருவத்தில் முடியே இல்லை என்றாலும் மெல்ல மெல்ல வளரத் தொடங்கும்.
இந்த விளக்கெண்ணையுடன் சிறிதளவு கற்றாழை ஜெல் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் வெங்காயச் சாறு ஒரு டீஸ்பூன் அளவிற்கு சேர்த்து கலந்து இதை உங்களுடைய தலைமுடிக்கு தேய்த்து ஒரு பத்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் ஈர துணியை வைத்து துடைத்துக் கொள்ளுங்கள். இது போல வாரம் ஒரு முறை மட்டும் பத்து நிமிடம் மசாஜ் செய்து வந்தாலே புருவ முடி அடர்த்தியாகும்.

தினமும் இரவு தூங்க செல்லும் பொழுது இரண்டு சொட்டு வெங்காயத்தில் இருக்கும் சாற்றை மட்டும் எடுத்து நீங்கள் புருவத்தில் தடவி உலர விட்டுவிட வேண்டும். அதன் பிறகு தூங்கி எழ வேண்டும். காலையில் நீங்கள் முகத்தை அலம்பிக் கொள்ளலாம். வெங்காயத்தில் இருக்கும் சல்பர் என்னும் மூலக்கூறு உங்களுடைய புருவத்தில் புதிய முடியை தூண்டிவிட்டு வளர்க்க கூடிய அற்புதமான ஆற்றல் படைத்தது. இது புருவம் மட்டுமல்லாமல் தலைமுடிக்கும் பயன்படுத்தலாம். தலைமுடிக்கு பயன்படுத்தும் போது நேரடியாக பயன்படுத்தக் கூடாது ஆனால் புருவத்தில் நீங்கள் நேரடியாக தாராளமாக அப்ளை செய்யலாம். நல்ல ஒரு ரிசல்ட் கிடைக்கும் மேலும் கற்றாழை ஜெல்லையும் தினமும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் புருவத்தின் மீது தடவி மசாஜ் செய்யுங்கள். இதுபோல செய்து வருவதன் மூலம் சீக்கிரமாகவே உங்களுடைய புருவ முடி கருகருன்னு நல்ல ஒரு அடர்த்தியான முறையில் கண்டிப்பாக வளரும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website