திருமணமாகி இரண்டு வாரம் கூட ஆகாத நிலையில்…”மகாலட்சுமியை விவாகரத்து பண்ணிருப்பேன்”-ரவீந்தர்

September 11, 2022 at 12:03 pm
pc

டிவி நடிகையான மகாலட்சுமியை இரண்டு ஆண்டுகளாக காதலித்து செப்டம்பர் 1ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன். திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் லைவில் வந்த ரவீந்தர் விவாகரத்து பற்றி பேசியிருக்கிறார்.

நன்றி

நான் என் திருமண புகைப்படத்தை யாருக்கும் அனுப்பவில்லை. சமூக வலைதளத்தில் தான் வெளியிட்டேன். மஹாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடச்சா வாழ்க்கை நல்லா இருக்குனு சொல்லவாங்க.., ஆனா அந்த மகாலட்சுமியே வாழ்க்கையை கிடச்சானு சொல்லி ஒரேயொரு போட்டோவை வெளியிட்டதற்கு என் வாழ்க்கையையே மாற்றிவிட்டீர்கள். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார் ரவீந்தர்.

மனைவி

என் மனைவி கேமராவுக்கு அந்த பக்கம் இருக்கிறாள். கேமராவுக்கு பின்னாடி இல்லைனு சொல்ல சொல்றாங்க. மகாலட்சுமி வெட்கப்படுறாங்கனு தான் நீங்க டேக் லைன்ல யூஸ் பண்ண வேண்டும். என்ன கேமராவுக்கு முன்னாடி வர முடியாதுனு சொல்ற. உனக்காக இந்த சீரியலை நான்கு நாள் பார்க்க முடியாமல் பார்த்திருக்கிறேன். என்னை பிராண்ட் ப்ரொமோட் பண்ண சொல்றா என மேலும் தெரிவித்துள்ளார் ரவீந்தர். 

விவாகரத்து

ரவீந்தர் மேலும் கூறியதாவது, அன்பே வா சீரியலை நைட் 10 மணிக்கு பார்க்கணுமாம். இதை நாலு நாள் பார்த்திருந்தால் நான் இவளை டைவர்ஸே பண்ணியிருப்பேன். இரவு 10 மணிக்கு அன்பே வா சீரியலை பார்க்க வச்சுட்டா. அது முடிந்த பிறகே 10.30 மணிக்கு லைவில் வந்திருக்கிறேன். பயங்கரமான கன்டிஷன்ல போயிட்டு இருக்கு என்றார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website