நடிகர் தனுஷை காட்டமாக பேசி சர்ச்சையில் சிக்கிய சிவகார்த்திகேயன்..

August 15, 2024 at 2:58 pm
pc

நடிகர் சிவகார்திகேயன் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் ஒரு நடிகர். அந்த வகையில் இவர் தற்போது ஒரு பேட்டியில் கூறிய விஷயம் வைரலாகி வருகின்றது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படம் ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வருகிறது. இதனை தொடர்ந்து அந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில், நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், அமரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் எஸ்கே புரொடக்ஷன் தயாரிப்பில் பல படங்களை தயாரித்தும் வருகிறார். அந்தவகையில் விடுதலை, கருடன் உள்ளிட படங்களில் ஹீரோவாக நடித்து மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று வரும் நடிகர் சூரியை வைத்து கொட்டுக்காளி என்ற படத்தினை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சி இன்று ஆகஸ்ட் 13 ஆம் திகதி நடைபெற்றுள்ளது. இதன்போது இந்த நிகழ்ச்சியில் பேச வேண்டிய சூழ்நிலையில் பேசினார் சிவகார்திகேயன்.

அவர் பேசும் போது ‘இந்த படம் வெற்றியடைந்து நான் முதலீடு செய்தது போக எனக்கு லாபம் வந்தால், அதை முதலில் எடுத்து இயக்குநர் வினோத்தின் அடுத்த படத்திற்கு முன்பணமாக கொடுத்துவிடுவேன். இன்னும் கொஞ்சம் லாபம் கிடைத்தால் வினோத் போன்ற 2 இயக்குநர்களுக்கு பட முன்பணமாக கொடுத்து இருப்பேன்.

எனக்கு வாழ்க்கையை கொடுத்த இந்த சினிமாவிற்கு என்னால் முடிந்த ஒரு சிறிய உதவியாக இதை பார்க்கிறேன். நான் கண்டுபிடித்து வாழ்கை கொடுத்தேன் என யாரையும் கூறமாட்டேன் இதற்கான காரணம் என்னை அப்படி சொல்லி சொல்லி பழக்கி விட்டார்கள்’ என கூறியுள்ளார்.

சிவகார்திகேயன் இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. மேலும் தனுஷின் ரசிகர்கள் சிவகார்திகேயன் பழையவற்றை எல்லாம் மறந்து பேசுகின்றார் என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website