பெண்கள் கட்டாயம் வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் அற்புதமான நன்மைகள் …..!!

வாழை மரத்தின் அனைத்து பகுதிகளுமே எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அந்த வகையில், வாழை மரத்தின் ஒரு பகுதியான வாழைப்பூவின் மகிமைகளை பற்றி தெரிந்துக் கொள்ளலாம். இந்த வாழைப்பூவில் இருந்து தான் சுவையான வாழைப்பழம் நமக்கு கிடைக்கிறது. பொதுவாக, உடலுக்கு நன்மை தரும் அனைத்து பொருட்களுமே சற்று வேலை எடுக்க தான் செய்யும்.
அதாவது, வாழைப்பூவை அதன் நாறு நீக்கி தனியாக எடுப்பதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். ஏனென்றால், நாறுடன் சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கடுப்பாகாமல் பொறுமையாக சுத்தம் செய்து, அதன் பின் நன்றாக சமைத்து சாப்பிட முயற்சி செய்யுங்கள். சிலருக்கு வாழைப்பூ பிடிக்காது. ஆனால், இதன் மருத்துவகுணங்கள் தெரிந்தால் வாழைப்பூவை சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள். வாழைப்பூவின் பயன்கள் பற்றி ஒரு பார்வை.
வாழைப்பூவின் அற்புத பயன்கள்:
❖ வாழைப்பூ பெண்களின் கர்பப்பபை பிரச்சனைகளை குறைப்பதில் முதல் இடத்தில் இருக்கிறது. வெள்ளைபடுதல் பிரச்சனை இருக்கும் பெண்கள் வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டால் பிரச்சனையில் இருந்து விரைவில் குணமடையலாம்.
❖ நீரிழிவு நோய் அதாவது சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைப்பூவை தங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைப்பூவை பெரும்பாலும் பொரியலாக தான் செய்வார். அப்படி பொரியலாக செய்து சாப்பிடுங்கள். இதனால் இரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
❖ பெண்களுக்கு இரும்புச்சத்து குறைப்பாட்டால் ஏற்படும் இரத்த சோகைப் பிரச்சனையை வாழைப்பூ சாப்பிட்டு சரிசெய்ய இயலும். ஏனெனில் வாழைப்பூவில் உள்ள இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் காணப்படுகின்றன. இது உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கும். இதனால், இரத்த சோகைப் பிரச்சனையும் குணமாகும்.
❖ வாழைப்பூவிற்கு இரத்தத்தை சுத்தப்படுத்தும் பண்புகள் உள்ளன. இவை இரத்தத்தில் இருக்கும் கொழுப்பை கரைப்பதோடு மட்டுமல்லாமல், உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. எனவே, வாரத்தில் இரண்டு முறை சாப்பிட முயற்சியுங்கள்.
❖ இரத்த மூலநோய் உள்ளவர்கள் வாழைப்பூவை வாரத்திற்கு இரண்டு முறை உணவில் சேர்த்து வந்தால் இரத்த மூலம் விரைவில் குணமாகிவிடும். அதுமட்டுமல்லாமல், இரத்ததில் ஹீமோகுளோபின் அளவும் அதிகமாகும்.