மக்களே உஷார் !!சினிமா பாணியில் துணிகரம்..ஒரே நாளில் 11,ATM களில் கைவரிசை!!

எர்ணாகுளத்தில் 11 இடங்களில் பெரும் ஏடிஎம் கொள்ளை நடந்துள்ளது. சவுத் இந்தியன் வங்கியின் 11 ஏடிஎம்களில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளது. இயந்திரத்தை சேதப்படுத்தி குற்றவாளிகள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரே நாளில் களமசேரியில் உள்ள ஏடிஎம்மில் 25,000 ரூபாய் திருடப்பட்டுள்ளது. ஏடிஎம்களில் உள்ள சிசிடிவி காட்சிகளில் குற்றவாளியின் முகம் தெளிவாகத் தெரிகிறது. முகத்தை மறைக்காமல் பணத்தை திருடியுள்ளார்.
ஏடிஎம் மையங்களுக்குள் வாடிக்கையாளர்கள் நுழையும் முன், இயந்திரத்தின் பணம் வெளிவரும் பகுதியை டேப் உபயோகித்து மூடிவிடுகிறார். ஏடிஎம்மிற்குள் செல்பவர்கள் பணம் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று விடுகின்றனர். வாடிக்கையாளர்கள் வெளியேறிய உடனே, குற்றவாளி வந்து மூடியிருந்த பகுதியைத் திறந்து பணத்தை எடுத்துக்கொள்வார். இவை அனைத்தும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது.
கடந்த ஆண்டு வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற துல்கர் சல்மானின் திரைப்படத்தில் இதே போன்ற ஒரு ஏடிஎம் கொள்ளை சம்பவம் நடக்கும். அதே பாணியில், தற்போது, கொச்சியில் நடந்துள்ள இக்கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.