மனைவி உடலை வீட்டில் புதைத்து கோவில் கட்டி அதிரவைத்த ஆசிரியர்

August 27, 2022 at 3:05 pm
pc

இந்தியாவில் உயிரிழந்த மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் சடலத்தை வீட்டிலேயே புதைத்து அதன் அருகில் தூங்கி வந்த ஆசிரியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஓம்கார் தாஸ் (50). பள்ளிக்கூட ஆசிரியர். இவருக்கும் ருக்மணி (45) என்ற பெண்ணிற்கும் 25 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான நிலையில் குழந்தை இல்லை.

சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ருக்மணி சமீபத்தில் உயிரிழந்தார். மனைவி மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்ததால் அவர் இழப்பை ஓம்காரால் தாங்க முடியவில்லை.

இதையடுத்து ருக்மணியின் உடலை வீட்டின் தாழ்வாரப் பகுதியில் புதைத்து, பூக்களால் அலங்கரித்து கோவில் போல மாற்றியுள்ளார். அவரும் கல்லறைக்கு அருகில் தூங்கியிருக்கிறார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். 

அங்கு பொலிசார் வந்த போது, நான் என் மனைவியை மிகவும் நேசித்ததால் இப்படி செய்தேன். இதோடு இது எங்கள் பாரம்பரியம் கூட, நான் மனிதர்களையும் ஆத்மாவை சமமாக தான் கருதுகிறேன் என ஓம்கார் கூறி அதிரவைத்தார்.

பின்னர் மூத்த அதிகாரிகள் ஓம்காரிடம் சமாதானமாக பேசி சடலத்தை தோண்டி எடுக்க அனுமது பெற்றனர். மனைவி இறந்ததால் உடைந்து போய் இப்படி அவர் செய்துவிட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website