மறுபடியுமா!! 10% உயரும் ஜி.எஸ்.டி !!! பல பொருட்களின் விலை எகிறுகிறது மத்திய அரசு அதிரடி தகவல் !!

December 7, 2019 at 3:37 pm
pc

பொருளாதார மந்த நிலையை சமாளிக்க பல்வேறு பொருட்களுக்கான ஜி.எஸ் டி வரிவிகிதத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரி முறை நடைமுறைக்கு வந்தது .இதன்மூலமாக அரசாங்கத்திற்கு சராசரியாக 14.4% வருவாய் கிடைத்துவந்துள்ளது. அண்மையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை காரணமாக 11.6% ஜி.எஸ்.டி வருவாய் குறைத்துள்ளது .இதனால் அரசுக்கு சுமார் 2 லட்சம்கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே ஜி.எஸ்.டி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீசு தொகையை ஈடுகட்டவும், வரிவிதிப்பில் மாற்றம் செய்ய ஜி.எஸ்.டி கவுன்சிலிடம் மத்திய அரசு பிரிந்துரைசெய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி தற்போது குறைந்தபட்ச வரிவிகிதமான 5 சதவீதத்தை 9 அல்லது 10 சதவீதமாக உயர்த்தலாம் என் கூறப்படுகிறது. 12 சதவீத வரி வரம்பை நீக்கிவிட்டு அதற்குஉட்பட்ட 243 பொருட்களுக்கு 18 சதவீதமாக வரி நிர்ணயம் செய்யலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வரி உயர்த்தப்பட்டால் மாவு வகைகள் ,பன்னீர் ,பருப்புவகைகள் , பாமாயில் , பிசா , உலர் பழங்கள் போன்ற உணவுப்பொருட்களின் விலை உயரும் .அதேபோல் உணவகங்களில் கட்டணம் அதிகமாகும் .மேலும் முதல் வகுப்பு ரயில் கட்டணங்கள் ,பட்டு லினன் துணிகள் ,ஆண்களின் கோட்டு சூட்டுகள், சுற்றுலா சேவைகள், மொபைல் போன்கள் போன்ற பொருட்களின் மீதான வரி உயரும். இதனால் வரிசெலுத்துவோருக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்றாலும் மத்திய அரசுக்கு 1லட்சம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். வரிவிலக்கு அளிக்கப்பட்டு வரும் சில பொருட்களுக்கும் வரிவிதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கும், 1000 ரூபாய்க்குட்பட்டு ஓட்டல்களில் தங்குவது போன்றவற்றிக்கு இனி வரி செலுத்த வேண்டியிருக்கும் என எதிப்பார்க்கபடுகிறது. வரி உயர்த்துவது குறித்து அடுத்தவரத்தில் மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு அதிகார பூர்வமான வெளியீடு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website