ரிஷி சுனக்கிற்கு அபராதம்..ஏன் தெரியுமா?

காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததால், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு இங்கிலாந்து காவல்துறை அபராதம் விதித்திருக்கிறது. இதையடுத்து அவர் தன் தவறை ஒப்புக்கொண்டதுடன், மன்னிப்பு கேட்பதாகவும், அபராதத்தை செலுத்திவிடுவார் என்றும் சுனக்கின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். சட்டத்தை மீறியதற்காக பிரதமருக்கே அபராதம் விதித்த காவல்துறையை அந்நாட்டு மக்கள் பாராட்டி வருகின்றனர்.