விமானதுல தேள் ஆ ஆ ஆ பயனியை தேள் கொட்டியதால் பரபரப்பு….
நாக்பூரில் இருந்து மும்பை சென்று ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் ஒருவரை தேள் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேள் கொட்டியதில் பாதிக்கப்பட்ட அந்த பெண் பயணி விமான நிலையத்தில் மருத்துவர் பரிசோதனை செய்த பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உணவுப் பொருட்களால் விமானத்திற்குள் தேள் நுழைந்திருக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது போன்ற சம்வவங்கள் அரிதான ஒன்று தான் என ஏர் இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.