வீட்டினுள் மழைநீர் புகுந்துள்ளது, உதவி கிடைக்கும் என நம்புகிறோம்! பிரபல தமிழ் நடிகர்

December 6, 2023 at 8:45 am
pc

சென்னை கனமழையால் தனது வீட்டினுள் தண்ணீர் புகுந்துள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் பதிவிட்டுள்ளார்.

மிக்ஜாம் புயல் சென்னை மாநகரை புரட்டிபோட்டுள்ளது. தற்போது மழை நின்ற நிலையில் வெள்ளம் மெல்ல வடிய தொடங்கியுள்ளது.

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், தற்போது மின்விநியோகம் ஒவ்வொரு பகுதிக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

நடிகர் விஷால் கனமழை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் மற்றொரு நடிகரான விஷ்ணு விஷால் தனது வீட்டினுள் தண்ணீர் புகுந்து, மின்சாரம் இல்லாமல் தவிப்பதாக பதிவிட்டுள்ளார்.

சென்னை கனமழையால் தனது வீட்டினுள் தண்ணீர் புகுந்துள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் பதிவிட்டுள்ளார்.

மிக்ஜாம் புயல் சென்னை மாநகரை புரட்டிபோட்டுள்ளது. தற்போது மழை நின்ற நிலையில் வெள்ளம் மெல்ல வடிய தொடங்கியுள்ளது.

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், தற்போது மின்விநியோகம் ஒவ்வொரு பகுதிக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அத்துடன், ‘எனது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளது மற்றும் காரப்பக்கத்தில் தண்ணீரின் மட்டம் மிக மோசமாக உயர்ந்து வருகிறது.

உதவிக்கு அழைத்துள்ளேன். மின்சாரம் இல்லை, Wifi இல்லை, போன் சிக்னல் இல்லை, ஒன்றுமில்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மொட்டை மாடியில் மட்டுமே எனக்கு சில சிக்னல் கிடைக்கிறது.எனக்கும் இங்குள்ள பலருக்கும் ஏதாவது உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம். சென்னை முழுவதும் உள்ள மக்களின் நிலையை என்னால் உணர முடிகிறது’ என தெரிவித்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website