வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கிறார் நடிகர் விஜய்

December 30, 2023 at 12:36 pm
pc

தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கவுள்ளார். 

விஜய் மக்கள் இயக்கம் உதவி

தென்மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 -ம் திகதிகளில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் என பலரும் உதவிகளை செய்தனர்.

இதனிடையே நடிகர் விஜய், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளையும், அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை வழங்குமாறு மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதனால், நிவாரணம் உள்ளிட்ட பொருட்களை மக்கள் இயக்க நிர்வாகிகள் மக்களுக்கு வழங்கினர். 

நேரில் செல்கிறார் விஜய்

இந்நிலையில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களல் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்கவுள்ளார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கேடிசி நகரில் 1000 பேருக்கு நிவாரணப் பொருட்களை நடிகர் விஜய் வழங்க உள்ளார்.

இதற்காக நடிகர் விஜய், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தனி விமான மூலம் வந்து, அங்கிருந்து காரில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website