கடன் பிரச்சனை -மாணவனை வெட்டி கொலை செய்து பழி தீர்த்த கொடுமை ..!!

April 7, 2022 at 11:01 am
pc

கடன் பிரச்சினையில் பள்ளி மாணவன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உடன் படித்த மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் கிருஷ்ணன் (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் ராமலிங்கம் வெள்ளையம்மாள் என்பவரிடம் கடன் பெற்றதாக கூறப்படுகின்றது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து ராமலிங்கத்தின் மோட்டார் சைக்கிளை வெள்ளையம்மாள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

வெட்டிக்கொலை

இதற்கிடையில், கடந்த 21-ந் தேதி அந்த மோட்டார் சைக்கிளை ராமலிங்கத்தின் மகன் கிருஷ்ணன் கேட்க சென்றுள்ளார். அப்போது, வெள்ளையம்மாளுடன் இருந்த பச்சமுத்து என்பவர் அரிவாளால் கிருஷ்ணணை வெட்டி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மாணவன் கிருஷ்ணன் ஆஸ்பத்திரியில் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து துவரங்குறிச்சி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பச்சமுத்துவை கைது செய்தனர். ஆனால், வெள்ளையம்மாள் கைது செய்யப்படவில்லை.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website