கட்டட தொழிலாளியின் உயிரை பறித்த பரோட்டா!
![pc](https://tamilexpress.in/wp-content/uploads/2024/06/parotta-kills-31052024-400.jpg)
கட்டட தொழிலாளி ஒருவர் சாப்பிடும் போது பரோட்டோ தொண்டையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டமான கன்னியாகுமரி, பண்டாரவிளையை சேர்ந்தவர் சனந்தனன் (40). இவர், கட்டட தொழிலாளியாக இருந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மகள் இருக்கும் நிலையில், மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணாமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இதில், மனைவியும் மகளும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். தனது அம்மா மேரிபாயுடன் சனந்தனன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த புதன் கிழமை இரவு உணவாக கடையில் இருந்து பரோட்டோ வாங்கி வந்து சாப்பிட்டுள்ளார்.
அப்போது, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே பரோட்டோ தொண்டையில் சிக்கி விக்கல் ஏற்பட்டுள்ளது. பின்னர், தனது அம்மாவிடம் தண்ணீர் வாங்கி குடித்த சில நிமிடங்களில் மயங்கி விழுந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அம்மா, உறவினர்களை அழைத்து வந்துள்ளனர். பின்னர், சனந்தனனை மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர்.
அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று கூறியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து மேரிபாய் அளித்த புகாரின் அடிப்படையில் மார்த்தாண்டம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.