தசரா நிகழ்வில் பெரும் சோகம்: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பக்தர்கள்! 8 பேர் பலி…

October 6, 2022 at 8:51 am
pc

மேற்கு வங்கம், ஜல்பைகுரியில் நடைபெற்ற தசரா விழாவில், துர்கா சிலை கரைக்கும் போது பெரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்கம், ஜல்பைகுரியில் தசரா விழாவின் கடைசி நாளானா நேற்று துர்கா சிலையை ஆற்றில் கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது. 40க்கும் மேற்பட்டோர் ஆற்றில் இறங்கி பூஜை செய்தனர்.

அப்போது திடீரென மால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மக்கள் எதிர்பார்க்காத நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். 

இதைக் கண்டு கரையிலிருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர். விபத்து நடந்த உடனேயே, மீட்புப் பணிகள் தொடங்கின.

சிலை கரைக்க வந்த பக்தர்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த விபத்தில் உயிரிழந்த 8 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நடந்து வருகின்றன. 

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website