மனைவியிடம் சிக்கிய கணவன் – பெண்கள், திருநங்கைகள் என ஒருவரையும் விட்டு வைக்காத வெறியன்.

August 15, 2022 at 10:45 am
pc

செங்குன்ற பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்ரீதர், வைதீஸ்வரி(26) தம்பதி. இந்த நிலையில் ஸ்ரீதர் நடத்தையில் சந்தேகம் அடைந்த வைதீஸ்வரியை அவர் தாக்கியதுடன் செல்போனையும் உடைத்துள்ளார். சில நாட்கள் கழித்து ஶ்ரீதரின் செல்போனை வைதீஸ்வரி ரிப்பேர் செய்து recovery செய்த போது அதில் அவர் ஷேர் சாட் ஆப் மூலமாக பல பெண்கள், திருநங்கைகள் உள்ளிட்டோரிடம் பழகி வந்தது தெரியவந்துள்ளது

மேலும் பெண்களிடம் நெருக்கமாக பழகி தகாத உறவில் இருந்ததற்கான ஆதாரங்களும் சிக்கியுள்ளது. மேலும் வைதீஸ்வரி உடனான திருமணத்தை மறைத்து மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவியை ஸ்ரீதர் திருமணம் செய்ததும் தெரியவந்தது. கல்லூரி மாணவிகளை ஏமாற்றி பாலியல் ரீதியான உறவில் ஈடுபட்டு வந்த கணவரிடம் இது குறித்து வைதீஸ்வரி கேட்டதும் அவரை தாக்கி தலைமறைவாகியுள்ளார். இது குறித்து தற்போது வைதீஸ்வரி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website