முட்டை குழம்பு சமைக்க மறுத்த காதலியை கொன்ற காதலன்!

March 19, 2024 at 2:21 pm
pc

ஹரியானாவில், முட்டை குழம்பு சமைக்க மறுத்த காதலியை கொன்ற கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

முட்டை குழம்பு வைக்க மறுத்த காதலி

ஹரியானாவில் லாலன் யாதவ் என்ற 35 வயது இளைஞர் தனது காதலி அஞ்சலியுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்துள்ளார்.

இவர்கள் ஹரியானாவின் குருகிராம் பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், காதலன் லாலன் யாதவ் தனது காதலி அஞ்சலியிடம் முட்டை குழம்பு வைத்து தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அஞ்சலி மறுக்கவே, ஆத்திரமடைந்த லாலன் யாதவ் காதலியை சுத்தியல் மற்றும் பெல்ட்டால் கொடூரமாக தாக்கி கொன்றுள்ளார்.

லாலன் யாதவ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும், அவரது மனைவி 6 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.தற்போது காதலன் லாலன் யாதவ்-வை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website