ரச்சிதா செய்த காரியத்தால் நிம்மதி பெருமூச்சுவிட்ட கணவர்!

November 23, 2022 at 4:10 pm
pc

பிக்பாஸ் வீட்டில் ரச்சிதா செய்த காரியத்தால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளாராம் அவரது கணவர் தினேஷ்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரபலங்களில் ஒருவர் சின்னத்திரை நடிகை ரச்சிதா. பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்த போது ரச்சிதாவும் சக சீரியல் நடிகரான தினேஷூட் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர்.

ராபர்ட் மாஸ்டர்

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் நடிகை ரச்சிதா. இதில் பங்கேற்றுள்ள சக போட்டியாளரான ராபர்ட் மாஸ்டர், அடுத்தவரின் மனைவி என்றும் பார்க்காமல் ரச்சிதாவுக்கு காதல் அம்பு விட்டு வருகிறார். பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என்ற யோசனையில் உள்ள ரச்சிதா, ராபர்ட் மாஸ்டரிடம் அமைதியாக விஷயங்களை சொல்லிப் பார்த்தார்.

கடுப்பில் ரசிகர்கள்

ஆனால் ராபர்ட் மாஸ்டர் கேட்பதாக இல்லை. தொடர்ந்து கட்டிப்பிடி, முத்தம் கொடு என தொல்லை கொடுத்து வருகிறார். இதனால் ரச்சிதாவின் கணவர் தினேஷ் மட்டுமின்றி ரசிகர்களும் ராபர்ட் மாஸ்டர் மீது கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர். ராபர்ட் மாஸ்டரை வெளியேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ரச்சிதா மீது குற்றச்சாட்டு

அதேநேரத்தில் ரச்சிதா, ராபர்ட்டிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல் அவரை பயன்படுத்தி வருகிறார் என்ற பேச்சும் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ராபர்ட் மாஸ்டரை முகத்திற்கு நேராகவே நாமினேட் செய்தார் ரச்சிதா. ராபர்ட் மாஸ்டர் விளையாடும் மனநிலையில் இல்லை ஆகையால் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்றார்.

தினேஷ் ஹேப்பி

இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரச்சிதாவின் கணவர் தினேஷும் இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராபர்ட் விவகாரத்தில் ரச்சிதாவை தவறாக பேச வேண்டாம் என்று கூறி வந்த தினேஷ், அவர் மனதை காயப்படுத்த வேண்டாம், பிக்பாஸ் வீட்டில் பிரச்சனை வேண்டாம் என்றுதான் ரச்சிதா அமைதியாக இருக்கிறார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website