அஜீரண பிரச்சனையை நொடியில் விரட்டும் சூப்பரான பாட்டி டிப்ஸ் ….!!
அஜீரணம் என்பது எந்த வயதுடையினருக்கும் ஏற்படும் முக்கியமான வயிற்றுத் தொல்லை. நாம் தினமும் உண்ணும் உணவு வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என பகுதி பகுதியாக செரிமானமாகிறது. இந்த அஜீரண கோளாறு மருத்துவத் துறையில் டிஸ்பெப்சியா என்று அழைக்கப்படுகிறது. சரியாக சாப்பிடாமல் இருப்பவர்களுக்கும், ஜீரணக் கோளாறு இருப்பவர்களுக்கும் அஜீரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனை ஒருவருக்கு ஏற்பட்டாலே மிகுந்த அசௌகரியத்தை உணர்வார்கள்.
அஜீரணத்திற்கு காரணம்:
மது அருந்துதல்
காரமான உணவு
மன அழுத்தம்
சாப்பிட்டவுடன் படுப்பது
பதற்றம்
அஜீரணத்திற்கான அறிகுறிகள்:
நெஞ்செரிச்சல்
வாய் துர்நாற்றம்
வயிறு உப்பசம்
வயிற்றுப்போக்கு
வாய் புளித்தல்
வயிற்று வலி
குமட்டல்
வாயு தொல்லை
பசியின்மை
அஜீரணத்தை விரட்டும் கை வைத்தியங்கள்:
டிப்ஸ் 1: ஒரு டம்பளர் வெதுவெதுப்பான நீரில் 2 ஸ்பூன் இஞ்சி சாறு, 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் தேன் ஆகியவற்றை கலந்து குடித்தால் அஜீரண கோளாறில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
டிப்ஸ் 2: கருப்பட்டியுடன் சிறிதளவு சுக்கு சேர்த்து அவற்றுடன் 4 மிளகும் சேர்த்து நன்றாக பொடியாக அரைத்து, காற்று போகாத ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டி வைத்து கொள்ளுங்கள். அஜீரணம் ஏற்படும் சமயங்களில் இரண்டு வேளை சாப்பிட்டால் அஜீரணம் குணமாகி நன்றாக பசி எடுக்கும்.
டிப்ஸ் 3: ஒரு கப் சாதம் வடித்த கஞ்சியில், 1/4 ஸ்பூன் மஞ்சள் பொடியை கலந்து குடித்தால் அஜீரணம், வயிறு உப்புசம் குணமாகும்.
டிப்ஸ் 4: மசாலா அதிகம் சேர்த்த உணவுகளை சாப்பிட்ட பிறகு, சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மென்றால், அஜீரண கோளாறு ஏற்படுவதை தடுக்க முடியும்.
டிப்ஸ் 5: ஒரு டம்ளர் தண்ணீரில் ஓமத்தை கையால் நசுக்கி போட்டு கலந்து குடித்தால், செரிமான பிரச்சனைகள் அனைத்தும் நொடியில் குணமாகும்.