அதிக சத்தம் வைத்து பாட்டு கேட்ட அண்ணனை அடித்து கொன்ற தம்பி !!

August 2, 2022 at 2:41 pm
pc

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் முளையன் காவு பகுதியில் வசிப்பவர் சர்வர் பாபு (24). நேற்று இரவு 10 மணியளவில் இவர் தனது செல்போனில் அதிக அளவு சத்தத்துடன் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் தூங்கி கொண்டிருந்த இவரது தம்பி சக்கீர்(18) சத்தத்தை குறைத்து வைக்குமாறு கூறியுள்ளார். ஆனால் பாபு சத்தத்தை குறைத்து வைக்கவில்லை. இதனால் டென்ஷன் ஆன தம்பி ஒரு மரக்கட்டையை எடுத்து பாபுவின் தலையில் ஓங்கி பலமுறை அடித்துள்ளார். இதனால் பாபு மயங்கி விழுந்ததும் சக்கீர் தப்பி ஒடிவிட்டார். பின்னர் அக்கம்பக்கத்தினர் சேர்ந்து பாபுவை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தார். விவரம் அறிந்த போலீசார் தம்பியை கைது செய்தனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website